தஞ்சாவூர், நவ.18 - தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே வலை யில் சிக்கிய கடல்பசுவை மீண்டும் உயிருடன் கடலில் விட்ட மீனவர்களுக்கு வனத்துறை சார்பில் பாராட்டு விழா நடத்தி ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. அதிராம்பட்டினம் அடுத்த ராஜாமடம் ஊராட்சிக்குட்பட்ட கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்த மீனவர் செல்லதுரை என்ப வரது வலையில் கடந்த வாரம் அரியவகை உயிரினமான 800 கிலோ எடை கொண்ட கடல்பசு சிக்கியது. இதனை வனத்துறை யினரின் அறிவுறுத்தலின் பேரில் பத்திரமாக மீட்டு மீண்டும் கடலிலேயே மீனவர்கள் விட்டனர். மீனவர்களின் இந்த செயலை பாராட்டும் விதமாக வனத் துறை சார்பில் அதிராம்பட்டினத்தில் பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை கலந்து கொண்டு 20 மீனவர்களுக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார்.