districts

img

தஞ்சை தாய்-சேய் நல கண்காணிப்பு மையத்துக்கு பாராட்டு

தஞ்சாவூர், மார்ச் 8- தஞ்சாவூர் மாநகரில் கடந்த  ஓராண்டில் 1,274 தாய்மார்களுக்கு  பாதுகாப்பான பிரசவம் செய்து,  நூறு சதவீதம் வெற்றி அடைந் துள்ளது. இதையொட்டி, தாய்- சேய் நல கண்காணிப்பு மையத் துக்கு வியாழனன்று பாராட்டு விழா நடைபெற்றது. மேயர் சண்.ராமநாதன் தலை மையும், ஆணையர் இரா.மகேஸ் வரி முன்னிலையும் வகித்தனர். இவ்விழாவில், சாதனை நிகழ்த்திய மாநகர நல அலுவலர் வீ.சி. சுபாஷ் காந்தி, செவிலியர்கள், தாய்-சேய் நல கண்காணிப்பு மையப் பணி யாளர்களுக்கு பாராட்டுச் சான்றி தழ்களும், பதக்கங்களும் வழங்கி  கௌரவிக்கப்பட்டனர்.  பின்னர் செய்தியாளர்களிடம் மேயர் சண்.ராமநாதன் தெரி விக்கையில், “தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தாய்-சேய் நல கண்காணிப்பு மையம் 2023 மார்ச் 4 அன்று தொடங்கப்பட்டது. இதன்மூலம்,  கல்லுக்குளம், கரந்தை, மகர் நோன்புசாவடி, சீனிவாசபுரம் ஆகிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பகால பரி சோதனைகள் மேற்கொள்ள வரும் கர்ப்பிணிகளில் உயர் ரத்த  அழுத்தம், சர்க்கரை நோய், ரத்த  சோகை, தைராய்டு போன்ற பரி சோதனைகள் செய்யப்படுகின்றன. இவர்களில் அதிக கவனம்  தேவைப்படுவோர் கண்டறியப் பட்டு, அவர்களுக்கு இம்மையத் திலிருந்து வாரம் ஒருமுறை கைப் பேசி மூலம் தொடர்பு கொண்டு, அவர்களுடைய சுகாதார குறியீடு அளவுகள் அறியப்படுகின்றன. இதன்மூலம் முறையாக பரிசோ தனை மேற்கொள்ளாமல் இருப்ப வர்களையும் கண்டறிந்து, அவர்க ளது முறையான கர்ப்பகால  கவனிப்பைக் கண்காணித்தல்  மற்றும் பரிசோதனை மேற் கொள்ள ஊக்குவிக்கப்படு கின்றனர். கடந்த ஓராண்டில் 1,274 தாய் மார்களுக்கு பாதுகாப்பான பிரசவம் செய்யப்பட்டு, தாயும், சேயும் நலமாக உள்ளனர். தஞ்சா வூர் மாநகரில் இந்த நூறு சதவீத பிரசவ வெற்றி மூலம் கடந்த ஓராண் டில் மகப்பேறு மரணம் பூஜ்ய  நிலைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது என்றார்.

2026-க்குள் பசுமை தஞ்சை

மேலும் சண்.ராமநாதன் பேசுகையில், பொலிவுறு நகரங்களுக்கான திடக்கழிவு மேலாண்மை பணிகள் புதுமையாகவும், ஒருங்கிணைத்தும், நிலைநிறுத்தவும் முதலீடு செய்வதற்கான திட்டம் (சிட்டிஸ்) 2.0 என்ற தேசிய அளவிலான போட்டியில் தஞ்சா வூர் மாநகராட்சியும் கலந்து கொண்டது.  இதன் முதல் சுற்றில் மொத்தம் 84 நகரங்கள் பங்கேற்றதில் தஞ்சாவூர் மாநகராட்சி யும் ஒன்று. இவற்றின் திட்ட வரைவுகளை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவ காரங்கள் அமைச்சகம் அமைத்த வல்லுநர்கள் குழு ஆய்வு செய்து, இரண்டாவது சுற்றுக்கு 36 நகரங்களைத் தேர்ந்தெடுத்தது. இந்த 36 நகரங்களுக்கான நேர்காணல்  பிப்ரவரி 8 அன்று நடைபெற்றதில், ஆணையர் இரா.மகேஸ்வரி தலைமையிலான குழு வினர் பங்கேற்றனர். இதற்கான முடிவுகள் மார்ச் 4 அன்று வெளியிடப்பட்ட தில், கடும் போட்டிக்கிடையே தேர்வு செய்யப்பட்ட 18 மாநகராட்சிகளில் தஞ்சாவூர் மாநக ராட்சியும் ஒன்று. தமிழ்நாட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே மாநகராட்சி தஞ்சாவூர்  மட்டுமே. இதன்மூலம் ரூ. 135 கோடியில் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மைத்  திட்டம் தஞ்சாவூர் மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு, 2026 ஆம் ஆண்டுக்குள்  பசுமை தஞ்சை உதயமாகும்”என்றார்.