மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக் குழு உறுப்பினர் கே.வி. கணேசனின் தந்தை வீரன் உடல் நலக்குறைவால் ஞாயிறன்று, அரவக்குறிச்சி ஒன்றியம், கொத்தபாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது உடலுக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு, கரூர் மாநகரச் செயலாளர் எம்.தண்டபாணி, மாவட்டக் குழு உறுப்பினர் ஜீவானந்தம், மாநகரக் குழு உறுப்பினர் சக்திவேல் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.