கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் கடந்த ஒருவாரமாக ஆர்ப்பரித்து கொட்டிய நீர் வரத்து குறைந்ததைத் தொடர்ந்து, குளிப்பதற்கான தடை ஆக.24 அன்று மதியத்துக்கு பிறகு விலக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஞாயிறன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குளித்து உற்சாகமடைந்தனர்.