நாகப்பட்டினம், அக்.13 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகப்பட்டினம் நகர மாநாடு சிபிஎம் மாவட் டக் குழு அலுவலகத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியாக உழைக்கும் மக்களின் கொடியான செங் கொடியினை மூத்த பெண் தோழர் ஜி.இராஜேஸ்வரி ஏற்றினார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். மாநிலக் குழு உறுப்பினரும், கீழ்வே ளூர் சட்டமன்ற உறுப்பி னருமான நாகைமாலி நிறை வுரை ஆற்றினார். நாகப்பட்டினம் நகர குழு வின் புதிய செயலாளராக க. வெங்கடேசன் தேர்ந்தெடுக் கப்பட்டார். ஒரு பெண் தோழர் உட்பட 7 பேர் கொண்ட நகர குழு தேர்ந் தெடுக்கப்பட்டது. முன்னதாக நாகப்பட்டி னம் நகர் பகுதியில் நடை பெற்ற கிளை மாநாடுகளில். பால்பண்ணைசேரி எம்.குருசாமி, கடைத்தெரு பாரதி மார்க்கெட் ஆ.மீ.ஜவ கர், 32 ஆவது வார்டு எஸ். ஜெயலட்சுமி, 14 ஆவது வார்டு கிளை எஸ்.விஜய குமார், 27 மற்றும் 33 ஆவது வார்டு கிளை ஆர்.பாலு, வெளிப்பாளையம் என்.பாபு ராஜ் ஆகியோர் கிளைச் செய லாளர்களாக தேர்ந்தெடுக் கப்பட்டனர்.