அரியலூர், செப்.29- தேங்கிக் கிடக்கும் கழிவுநீரை அப்புறப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் என்ஜிஓ காலனியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வசிப்பவர்கள் அனைவரும் அரசு துறை சார்ந்த அதிகாரிகளாக இருக்கின்றனர். இருப்பினும் இப்பகுதியில் அடிப்படை வசதிகளான தெரு மின்விளக்கு, குடிநீர் வசதி கிடைக்காமல், மக்கள் சிரமப்படு கின்றனர். இதனால், சிலர் வீட்டில் உள்ள ஆழ்துளைக் கிணறு மூலம் கிடைக்கும் குடிநீரை பயன்படுத்துகின்றனர். ஆழ் துளைக் கிணறு வசதி இல்லாதவர்கள் குடிக்க தண்ணீர் இல்லாமல் மிகவும் அவதிப் பட்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, என்ஜிஓ காலனி முதல் குறுக்குத் தெருவில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீர் செல்ல, வாய்க் கால் அமைத்து நீர் தேங்காமல் இருக்க நக ராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது மழைக்காலமாக இருப்பதால், சாக்கடை கழிவுநீருடன் மழை நீரும் கலந்து குடியிருப்புப் பகுதிகளுக்குள் செல்லும் சூழல் உள்ளது. இதனால் சிலர் தங்கள் வீடுகளுக்கு முன்பு, மண்ணைக் கொட்டி மேடு அமைத்துள்ளனர். எனவே என் ஜிஓ காலனி முதல் குறுக்குத் தெருவில், கழிவு நீர் வாய்க்கால் அமைத்து பொது மக்களை நோய்த் தொற்றிலிருந்து காக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அங்கு தெரு மின்விளக்குகள், குடிநீர் வசதி செய்வதற்கான ஆய்வுகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி, இப்பகுதி மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.