districts

பொன்னம்பட்டியில் ஜல்லிக்கட்டு 16 பேர் காயம்

புதுக்கோட்டை, மே 8-

  புதுக்கோட்டை நகரக் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொன்னம்பட்டி ஓட்டகுளத்தில், கரண செல்ல  அய்யனார் கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி ஞாயிறன்று நடைபெற்றது.

   மாநில சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்து ராஜா ஆகியோர் போட்டியைத் தொடங்கி வைத்தனர்.

   போட்டியில், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, சிவ கங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த 586 காளைகள் கலந்து கொண்டன. இதில், 186 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர்.

   வெற்றி பெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரர் களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. 6 மாடு பிடி வீரர்  களும் 10 பார்வையாளர்களும் காயமடைந்தனர். இவர்  களில் 4 பேர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.