திண்டுக்கல், ஜுலை 12- திண்டுக்கல் சிறுமலை செட் மார்க்கெட்டிற்கு புதுக்கோட்டை, பண்ருட்டி பலாப்பழங்கள் வருகை கார ணமாக பலாப்பழங்களின் விலை வீழ்ச்சியடைந்துள் ளது. ரூ.2000 வரை விற்ற பலாப்பழம் தற்போது ரூ.500 வரை வீழ்ச்சியடைந்து விற்பனையாகிறது. திண்டுக்கல் சிறுமலை சந்தையில் தினசரி காலை 6 மணி முதல் 8 மணி வரை பலாப்பழ சந்தை நடை பெறும். இந்த சந்தையில் சிறுமலையில் விளையக் கூடிய பலாப்பழங்களுக்கு தனி மகத்துவம் உண்டு. இங்கு விளையக்கூடிய பலாப்பழம் இனிப்பு மற்றும் புளிப்பு சுவையுடன் சுவை மிகுந்து காணப்படுவதால் சிறுவர்கள் முதல் பெரிய வர்கள் வரை அனைவரும் விரும்பி வாங்கி சாப்பிடு வது வழக்கம். இந்த சந்தை யில் ஏலம் முறையில் விற் பனை செய்யக்கூடிய பலாப் பழங்களை திருச்சி, மதுரை, கோவை, சென்னை, தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகளும் பொதுமக்களும் விரும்பி வாங்கி செல்வர். சென்ற வாரம் வரை இந்தச் சந் தைக்கு சுமார் 500 முதல் 1000 பழங்கள் வந்த நிலையில் பழம் ஒன்று 500 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை விலை உயர்ந்து விற்ப னையானது. ஆனால் தற் பொழுது இந்தச் சந்தைக்கு சிறுமலை பலாப்பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது. புதுக்கோட்டை மற்றும் பண் ருட்டி மாவட்டங்களில் இருந்து சுமார் 5000க்கும் மேற்பட்ட பலாப்பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளது. இதனால் சென்ற வாரம் வரை ரூ.500 முதல் ரூ.2 ஆயிரம் வரை விற்ற பலாப்பழம் ரூ. 300, 400 ரூபாய்க்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் சிறுமலையி லிருந்து பலாப்பழங் களை பறித்து கொண்டு வரும் போக்குவரத்துக் கூலிக்கு கூட கட்டுப்படியாகாத நிலை உள்ளது என விவசாயிகள் வேதனைப்படுகிறார்கள். நிரந்தர விலை கிடைத்திட நடவடிக்கை எடுத்திடுக! இதுதொடர்பாக பலாப் பழ வியாபாரிகள் ராகேஷ் மற்றும் அபுல் ஹசன் ஆகி யோர் கூறுகையில், பலாப் பழங்களுக்கு நிரந்தரவிலை கிடைத்திட கேரளா போன்ற மாநிலங்களில் பலாப்பழங் களில் இருந்து தயாரிக்கப் படும் பிஸ்கட், சிப்ஸ் போன்ற பை புராடக்ட் மற்றும் பலா ஜூஸ் கம்பெனி உள்ளது போல் தமிழகத்தி லும் பலா ஜூஸ் கம்பெனி பை புராடக்ட் முறையை தமிழக அரசு கொண்டுவர வேண்டும். அப்போதுதான் பலாப்பழங்களுக்கு நிரந்தர மான விலை கிடைக்கவாய்ப்பு உள்ளது. மேலும் பலா காயாக இருக்கும் போதுஅதன் மதிப்பூட்டும் பொருட்களை சர்க்கரை நோயாளிகள் கூட சாப்பிடலாம். பலாப்பழம் அந்த அளவிற்கு சந்தானது என்று தெரிவித்தனர். (ந.நி.)