districts

img

உண்மைக்கு நெருக்கமாக இலக்கியம் படைப்பது முக்கியம் திரைப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் கருத்து

புதுக்கோட்டை, ஜன.13 - ஒரு படைப்பாளி உண்மைக்கு நெருக்கமாக இலக்கியம் படைப்பது  மிக முக்கியமானது என்றார் எழுத்தா ளரும், திரைப்பட இயக்குநருமான பாரதி கிருஷ்ணகுமார். புதுக்கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற விழாவில், ஆலங்குடி வெள்ளைச்சாமியின் ‘குலசாமியின் முத்தம்’ என்ற கவிதை நூலை வெளியிட்டு அவர் மேலும் பேசிய தாவது: மொழிதான் மனிதனை நாகரி கம் உள்ளவனாக மாற்றுகிறது. மனிதனை அழகுபடுத்திய மொழியை  கவிஞர் அழகுபடுத்துகிறான். யாருக் கும் தெரியாத சொற்கள் என்று கிடையாது. அதே நேரத்தில் வேறு, வேறு இடங்களில் கிடந்த  சொற்களை அருகருகே கொண்டு  வந்து கவிஞன் புதிய மொழியை உருவாக்குகிறான். எளிய சொற் களைப் பயன்படுத்தி வெள்ளைச் சாமி அழகிய கவிதைகளைப் படைத்து இருக்கிறார். எளிமையாக எழுதுவது எளிமையானது அல்ல. உண்மைகளை சுமந்து நிற்கிறது;  இந்தத் தொகுப்பில் அறிவியலுக்குப் புறம்பாக ஒரு வார்த்தையும் இல்லை. எந்த இடத்திலும் கவிஞன்  மண்டியிடவில்லை. அந்த வகையில்  இது சிறந்த முற்போக்கு இலக்கியம் என வகைப்படுத்தலாம். ‘எல்லா வற்றையும் ஏறி மிதிக்கும் பசித்தவ னின் வயிறு’ என்று ஒரு கவிதையில்  எழுதி இருப்பார். இதுபோன்ற போர்க்குணம்மிக்க கவிதைகளை உள்ளடக்கியது இந்தத் தொகுப்பு. சமூகத்துக்கு என்ன சொல்லப் போகிறோம், அதை எப்படிச் சொல்லப் போகிறோம் என்பது எழுத் தாளருக்கு உள்ள சவால். குழந்தை களுக்குச் சொல்வதானால், குழந்தைப் பருவத்துக்கே சென்று வாழ்ந்து, பிறகு நிகழ்காலத்துக்கு வந்து எழுத வேண்டும். சத்தி யத்துக்கும் உண்மைக்கும் நெருக்க மாக எழுதுவது மிகவும் முக்கியம். ஒரு படைப்பாளி உண்மைக்கு நெருக் கமாக இலக்கியம் படைப்பது முக்கி யம். இன்பமும், வலியும், வியப்பும் என எல்லாமும் உண்மைதான். எனவே, எழுத்தில் எங்கும் பொய் இருக்க முடியாது, இருக்கக் கூடாது.  இவ்வாறு பாரதி கிருஷ்ணகுமார் பேசினார். விழாவுக்கு தமிழ்ச் சங்கத் தலை வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமை  வகித்தார். பேக்கரி மஹராஜ் குழுமத்  தலைவர் அருண் சின்னப்பா முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். ஸ்ரீபாரதி மகளிர் கல்விக் குழுமத் தலைவர் குரு.தனசேகரன், எம்எஸ் சுவாமிநாதன் ஆய்வு நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின்  மாநிலத் துணைத் தலைவர் நா. முத்துநிலவன், மாவட்டத் தலைவர் ராசி பன்னீர்செல்வன், பேரா. மு.பால சுப்பிரமணியன், புலவர் கு.ம. திருப்பதி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக கவிஞர் நேசன் மகதி வரவேற்க, சு.பீர்முகமது நன்றி  கூறினார். நிகழ்ச்சியை மகா சுந்தர் ஒருங்கிணைத்தார்.