districts

img

கோட்ட மாறுதல் ஆணைகளை தாமதமின்றி வழங்குக! வணிகவரி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், மே 30-  

     கோட்ட மாறுதல் ஆணை களை தாமதமின்றி உடனடி யாக வழங்க வேண்டும். டிஎஸ்டிஓ பதவி உயர்வு வழங்க வேண்டும். விஞ்  ஞான பூர்வமற்ற வருவாய் குறியீடு வேலை இலக்கு நிர்ணயிப்பதை ரத்து செய்ய வேண்டும். தகுதிகாண் நிறைவு ஆணையினை உட னடியாக வழங்க வேண்டும்  என்பன உள்ளிட்ட நியாய மான நிலுவை கோரிக்கை களை நிறைவேற்ற வேண் டும் என வலியுறுத்தி, செவ்  வாயன்று தஞ்சாவூர் மாவட்ட தமிழ்நாடு வணிகவரி பணி யாளர் சங்கம் சார்பில், ஊழி யர்கள் கருப்பு பட்டை அணிந்து பணி செய்தனர்.  

   தொடர்ந்து, அலுவலக உணவு இடைவேளை நேரத்தில் வணிகவரிப் பணி யாளர் சங்க மாவட்ட தலை வர் முருகானந்தம் தலைமை யில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஆ.குமரேசன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.  

   தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க வடக்கு வட்டச் செய லாளர் அஜய்ராஜ், முன்னாள் படை வீரர் நலன் அலுவலர் சங்கம் இளங்கோவன், அரசு தொழிற்பயிற்சி அலு வலர் சங்க மாநிலச் செயலா ளர் நவநீதன், நகராட்சி அனைத்து சங்க கூட்ட மைப்பு தஞ்சை மண்டல பொறுப்பாளர் மூர்த்தி, அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில செயலாளர் ஆர்.பன் னீர்செல்வம், அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.கோதண்டபாணி கோரிக்கைகளை வாழ்த்திப் பேசினர். நிறைவாக, வணிக வரிப் பணியாளர் சங்க மாவட்ட துணை தலைவர் மதியழகன் நன்றி கூறினார்.