districts

img

திருச்சியில் புதிதாக 2 மாணவர் விடுதிகள்

திருச்சிராப்பள்ளி, செப்.30 - திருச்சி பஞ்சப்பூரில் புதிதாக கட்டப்பட்டு  வரும் ஒருங்கிணைந்த பேருந்து முனை யத்தின் அருகில் ஆதிதிராவிடர் நலத்துறை யின் சார்பில், மாணவர் விடுதிக்காக தேர்வு  செய்யப்பட்டுள்ள இடத்தையும், திருச்சி ராஜா காலனி தாட்கோ அலுவலக வளாகத் தில் மாணவர் விடுதிக்காக தேர்வு செய்யப்பட் டுள்ள இடத்தையும் ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் சனிக் கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.  ஆய்வின்போது அமைச்சர் கயல்விழி செல்வராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித் ததாவது: பள்ளிகளையும், விடுதிகளையும் நாங்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப புதி தாக விடுதிகள் தேவைப்படு கிறது. அதனடிப்படையில் இந்த  நிதியாண்டிற்காக திருச்சிராப்பள்ளி, மதுரை, கோவை மற்றும் நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் ரூ.100 கோடி  மதிப்பில் மாணவர்களுக்கான விடுதி கட்டடங்கள் கட்ட  தமிழ்நாடு அரசு அறிவித்த நிலையில்,  அதற்கானப் பணிகள் தொடங்கப்பட வுள்ளன. ஏற்கனவே, 3 மாவட்டங் களை ஆய்வு செய்து, தற்போது திருச்சி ராப்பள்ளி மாவட்டத்தில் இந்த ஆய்வு  மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  பஞ்சப்பூரில் 350 மாணவர்கள் தங்கும் வகையில் ஒரு விடுதியும், ராஜாகாலனியில் சுமார் 250 மாணவர்கள் தங்கும் வகையில் மற்றொரு விடுதியும் கட்டப் படவுள்ளன. அதற்காக தேர்வு செய்யப்பட்டு உள்ள இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட் டது. இப்பணிகள், தொடங்கப்பட்ட ஒரு வருடத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும். விடுதி யில் மாணவர்களுக்கு வழங்கும் உணவு  வகைகளை மாற்றம் செய்ய அறிவுறுத்தி யுள்ளோம்.  சில வழக்குகள் தாமதமானாலும் நியா யம் கிடைக்க வேண்டும் என்பதுதான் அரசின்  நோக்கம். அந்த வகையில், வாச்சாத்தி வழக்கில் தீர்ப்பு கால தாமதமானாலும், வர வேற்கத்தக்கது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.