திருச்சிராப்பள்ளி, நவ.9- தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றிய குழு கூட்டம் செவ்வாயன்று திருவெள்ளறை விவசாய சங்க சேவை மையத் தில் முத்தையா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கடந்த கால அறிக்கையினை விவசாய சங்க ஒன்றிய செயலாளர் முருகேசன் வாசித்தார். மாவட்ட செயலாளர் நடராஜன், மாவட்ட குழு முடிவு களை விளக்கி பேசினார். தீராம்பாளையம் கிராமத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட ஆதி திராவிட மக்கள் கடந்த 40 வரு டங்களாக குடியிருந்து வருகின்ற னர். இவர்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி நவம்பர் 29 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மண் ணச்சநல்லூர் வட்டாட்சியரிடம் தனித்தனியாக சென்று மனு கொடுக்கும் போராட்டம் நடத்து வது. நவ.26 ஆம் தேதி ஆளு நர் மாளிகை நோக்கி நடக்க இருக்கும் சென்னை பேரணியில் கலந்து கொள்வது. கேரள மாநிலம் திருச்சூரில் நடக்க இருக்கும் 30-வது அகில இந்திய விவசாயிகள் சங்க மாநாட்டு ஜோதி வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. ஒன்றிய குழு உறுப்பினர் நடராஜன் நன்றி கூறினார்.