districts

img

இந்திய மருத்துவக் கழக புதிய கட்டிடம் திறப்பு விழா

மயிலாடுதுறை, ஜூலை 1 -

     மயிலாடுதுறை நகரப் பகுதியை ஒட்டி யுள்ள வள்ளாலகரத்தில் இந்திய மருத்துவக்  கழகத்தின் மயிலாடுதுறை கிளைக்கு புதிதாக  கட்டிடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா  மற்றும் மருத்துவர்கள் தின விழா சனிக் கிழமை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலை மையில் நடைபெற்றது.

    கழகத் தலைவர் மரு.பாரதிதாசன் வர வேற்றார். பொருளாளர் மரு.ரத்தின அருண் குமார் புதிய கட்டிட மதிப்பீடு பகிர்வு உரை யாற்றினார். இந்திய மருத்துவக் கழக கிழக்கு  மண்டல துணைத் தலைவர் மரு.கோவிந்த ராஜன் மற்றும் மூத்த மருத்துவர்கள் முன்னிலை வகித்தனர். ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்திய மருத்துவ கழக புதிய கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி திறந்து வைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா கட்டிட கல்வெட்டை திறந்து வைத்தார்.

   தொடர்ந்து நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் மருத்துவர்களின் பணியை  பாராட்டி சிறப்புரையாற்றினர். மருத்துவத் துறையில் சேவையாற்றி வரும் மூத்த  மருத்துவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி  கௌரவிக்கப்பட்டது. சுகாதாரத்துறை அதி காரிகள், அரசு மருத்துவத்துறை அதிகாரி கள், இந்திய மருத்துவ கழக மருத்துவர்கள், வணிகர் சங்க பிரதிநிதிகள், ரோட்டரி, லயன்ஸ் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவை  சங்கங்களை சார்ந்த பிரதிநிதிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை  கிளை செயலாளர் மரு.சௌமித்யாபானு நன்றியுரையாற்றினார்.