districts

img

பேராவூரணியில் தண்ணீர் பந்தல் திறப்பு

தஞ்சாவூர், மே 5 -  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது. பேராவூரணி பேரூராட்சி திருமண மண்டபம் நுழைவாயில் முன்பாக, திமுக சார்பில் தண்ணீர் பந்தலை பேரா வூரணி எம்எல்ஏ நா.அசோக்குமார் தலைமை  வகித்து திறந்து வைத்தார். இதில், பேராவூரணி தெற்கு ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன், பேராவூரணி நகரக் கழக செயலாளர் என்.எஸ்.சேகர், வார்டு கவுன்சிலர்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.  தொடர்ந்து, பொதுமக்களுக்கு தர்பூசணி, நீர்மோர், சர்பத், குடிநீர் ஆகியவை  வழங்கப்பட்டன.