districts

img

கந்தர்வக்கோட்டை தொகுதியில் முடிவுற்ற பணிகள் திறப்பு

அமைச்சர்கள் பங்கேற்பு புதுக்கோட்டை, மார்ச் 16 - கந்தர்வக்கோட்டை சட்டப்பேர வைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதி களில் முடிவுற்ற பணிகளை மாநில அமைச்சர்கள் கே.என்.நேரு, சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் திறந்து வைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக் கோட்டை தொகுதி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கீரனூர், கறம்பக் குடி தேர்வுநிலை பேரூராட்சிகளில், நக ராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்  துறை சார்பிலும், கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி யின்கீழ் நகர்ப்புற வளர்ச்சித் துறை  அமைச்சர் கே.என்.நேரு, சட்டத்துறை  அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பல்வேறு முடிவுற்றத் திட்டப் பணி களை திறந்து வைத்தனர்.  இதில் கீரனூர் தேர்வுநிலை பேரூ ராட்சியில், விரிவாக்கம் செய்யப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலை யம் திறந்து வைக்கப்பட்டது. கந்தர்வக் கோட்டை பேருந்து நிலையத்தில், சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு  நிதியின் (2022-23) கீழ், புதிதாகக் கட்டப்பட்டுள்ள கலையரங்கம், பயணி யர் நிழற்குடை திறக்கப்பட்டது. கறம்பக் குடி தேர்வுநிலை பேரூராட்சியில், புதி தாக கட்டப்பட்டுள்ள அறிஞர் அண்ணா நவீன பேருந்து நிலையம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு  நிதியின்கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள நூலகக் கட்டிடம் ஆகியவை திறந்து வைக்கப்பட்டன. நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர்  ஐ.சா.மெர்சி ரம்யா தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.சின்ன துரை (கந்தர்வக்கோட்டை), வை.முத்து ராஜா (புதுக்கோட்டை), முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்ல பாண்டியன், பேரூராட்சித் தலைவர்கள் த.ஜெயமீரா ரவிக்குமார் (கீரனூர்), உ.முருகேசன் (கறம்பக்குடி), புதுக் கோட்டை நகர்மன்றத் தலைவர் தில கவதி செந்தில், ஒன்றியக்குழுத் தலை வர்கள் கார்த்திக் (எ) இரா.ரெத்தின வேல் (கந்தர்வக்கோட்டை), மாலா ராஜேந்திரதுரை (கறம்பக்குடி), பாண்டிச் செல்வி கே.ஆர்.என்.போஸ் (குன்றாண் டார்கோவில்) உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.