கரூர், ஜூலை 26 -
பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப் பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பின ரின், சமூக கல்வி மற்றும் பொருளா தார நிலைகளை மேம்படுத்தும் திட்டங் களின்கீழ், கரூர் மாவட்டத்தில் 27592 பய னாளிகளுக்கு ரூ.13,46,73,188 மதிப் பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள் ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் த.பிரபுசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கரூர் மாவட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் மே 2021 முதல் ஜூன் 2023 வரை மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர், கிராமப் புற பெண்கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 10,583 பயனாளிகளுக்கு ரூ.66,90,500 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவியர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 14 764 பயனாளிகளுக்கு ரூ.5,30,89,769 மதிப்பீட்டிலும், தமிழ்நாடு பிற்படுத்தப் பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ கடன் திட்டம்) கீழ் 1167 பயனாளிகளுக்கு ரூ.6,08,78, 000, இலவச தேய்ப்புப் பெட்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 300 பயனாளி களுக்கு ரூ.14,99,960 மதிப்பீட்டிலும் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
முஸ்லீம், கிறித்தவ மகளிர் உதவும் சங்கம் சார்பாக 440 பயனாளிகளுக்கு ரூ.52,99,000 மதிப்பீட்டிலும், உலமாக் கள் மற்றும் இதர பணியாளர்கள் நல வாரியம் சார்பாக 21 பயனாளிகளுக்கு ரூ.1,82,000 மதிப்பீட்டிலும், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழக கடன் திட்டத்தின் கீழ் (டாம்கோ) 80 பயனாளிகளுக்கு ரூ.27, 88,000 மதிப்பீட்டிலும் வழங்கப்பட்டு உள்ளன.
பிற்படுத்தப்பட்டோருக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத் தின் கீழ் 78 பயனாளிகளுக்கு ரூ.4,18, 560 மதிப்பீட்டிலும், உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு விலை யில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத் தின் கீழ் 151 பயனாளிகளுக்கு ரூ.7,77, 399 மதிப்பீட்டிலும் என மொத்தம் (மே 2021 முதல் ஜூன் 2023 வரை) 27592 பய னாளிகளுக்கு ரூ.13,46,73,188 மதிப்பீட் டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள் ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.