அரியலூர், மே 23 -
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மாளிகை மேட்டில் தொல்லியல் துறை மூலம் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு பணியில் மீண்டும் வாய்க்கால் போன்ற அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கங்கை கொண்ட சோழபுரம் அருகே உட்கோட்டை கிராமத்தில், சோழப்பேரரச ரான முதலாம் ராஜேந்திர சோழன் மற்றும் அவருக்கு பின்னால் ஆண்ட சோழ மன்னர்க ளின் அரண்மனை இருந்ததாக கூறப்படும் மாளிகைமேடு பகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதற்கட்ட அக ழாய்வுப் பணிகள் தொடங்கின.
அப்போது பழங்காலக் கூரை ஓடுகள், பானை ஓடுகள், சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தினாலான ஓடுகள், இரும் பினாலான ஆணிகள், கலை நய மிக்க மணிகள், சிறிய அளவிலான அரிய பொருட்கள், கட்டடங்கள் இருந் ததற்கான எச்சங்கள் கிடைத்தன. 2022-ஆம் ஆண்டு மார்ச் 11-ஆம் தேதி இரண்டாம் கட்ட அகழாய்வு தொடங்கியது.
ஆய்வின்போது சோழர் காலத்து கட்டடங்கள், பழங் கால அரண்மனை சுற்றுச்சுவர்களின் தொடர்ச்சியும், பழங்காலப் பானை மற்றும் ஐம்பொன் கலந்த செப்பு காப்பு ஆகியவையும் கண்டுபிடிக்கப் பட்டது. தற்போது ரூ.30 லட்சம் மதிப்பில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுப் பணி ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கப்பட்டது.
இந்நிலை யில் அங்கு திங்களன்று வாய்க்கால் போன்ற அமைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது கிழக்கு மேற்காக 315 செமீ நீளம், 45 செமீ அகலம் உள்ளது. மீண்டும் தோண்ட தோண்ட இதனுடைய நீளம் தெரியக் கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.