ரெத்தினக்கோட்டையில் மாட்டு வண்டி-குதிரை வண்டி பந்தயம்
அறந்தாங்கி, மே 2- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா ரெத்தினக்கோட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீ பூமாரி அம்மன் கோவில் 27,ஆவது ஆண்டு சித்ரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் புதன்கிழமையன்று நடைபெற்றது. இதில் காலையில் நடைபெற்ற பந்தயத்தில் புதுக்கோட்டை, மதுரை,தேனி, சிவகங்கை, தஞ்சை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 100 க்கும் மேற்ப்பட்ட ஜோடி மாட்டு வண்டிகளும் 15- க்கும் மேற்பட்ட குதிரைகளும் கலந்து கொண்டன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சாலை நெடு கிலும் இரு புறங்களிலும் நின்று ஆரவாரத்து டன் போட்டியைக் கண்டு ரசித்தனர். மேலும் இந்த பந்தயத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாட்டு வண்டி உரிமையா ளர்களுக்கு ரூ. 3 லட்சத்து 35 ஆயிரம் ரொக்கப் பரிசும் கோப்பைகளும் வழங்கப்பட்டன.
தமிழ்ப் பல்கலை.யில் ஆசிரியர்களுக்கு மொழிப்பயிற்சி
தஞ்சாவூர், மே.2 - தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ‘மொழிப்பயிற்சியும் அகராதியும்’ என்னும் பொருளில், ஏப்ரல் 29, 30 ஆகிய இரு நாட்கள் ஆசிரியர்களுக்கான கோடைக்கால பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. முதல்நாள் தொடக்க விழாவில் அகராதியி யல் துறை இணைப்பேராசிரியர் சி.வீரமணி வரவேற்றார். பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் வி.திருவள்ளுவன் தொடங்கி வைத்து உரையாற்றினார். அவர் பேசுகையில், “நவீன மொழிப் பயன் பாட்டுச் சிந்தனைகளுக்கு அகராதியின் பங்க ளிப்பு முக்கியமானது. பிழைகளற்ற தமிழ்ப் பயன்பாட்டினை மாணவர்கள் மத்தியில் கொண்டுசெல்ல ஆசிரியர்களின் மொழிப் பயன்பாட்டுச் சிந்தனையில் மாற்றங்கள் தேவை. அதனை மையமிட்டு இந்தப் பயிற்சிப் பட்டறை நடத்தப்படுகிறது” என்றார்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை
புதுக்கோட்டை, மே 2- சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் அருகே யுள்ள மேலமுத்துடையான் பட்டியைச் சேர்ந்தவர் அ. முத்து (69). இவர், கடந்த 2022 ஜனவரி 31 ஆம் தேதி, 9ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.இந்த புகா ரின்பேரில், புதுக்கோட்டை நகர அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் முடிவில் நீதிபதி எஸ். ஜெயந்தி வியாழக் கிழமை தீர்ப்பளித்தார்.பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்துக்காக 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 5 ஆயிரம் அபராதமும், மிரட்டல் விடுத்த குற்றத்துக்காக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்துக்காக ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. சிறைத் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க லாம் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
தரங்கம்பாடியில் கோர விபத்து பைக்குகள் மோதி கீழே விழுந்தவர்கள் மீது டிராக்டர் மோதியதில் 4 பேர் பலி
மயிலாடுதுறை மே 02- மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதியதில் நான்கு பேர் பலியாகினர்.. கடலூர் மாவட்டம் பஞ்சாங்குப்பத்தை சேர்ந்த முகமது ஷக்கீம் , ஹரி, ஆகாஷ் ஆகிய 3 இளைஞர்கள் நாகப்பட்டினத்தில் விழா ஒன்றில் பங்கேற்றனர்.பின்னர் புதனன்று திரும்பி கடலூருக்கு ஒரே இருசக்கர வாகனத்தில் மூவரும் சென்றனர். தரங்கம்பாடியில் உள்ள தனியார் கல்லூரி அருகே வந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த தரங்கம்பாடியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் 4 பேரும் நிலை தடுமாறி சாலையில் கீழே விழுந்தனர். அப்போது எதிரே வந்த டிராக்டர் கீழே விழுந்த 3 இளைஞர்கள் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த மற்றொரு வாகனத்தில் வந்த ஸ்ரீதரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக பொறையார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த பொறையார் தீயணைப்பு மீட்பு படையினர் மற்றும் போலீசார் இறந்த நபர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஶ்ரீதர் பொறையார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று மேல்சிகிச்சைக்காக நாகப்பட்டிணம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.ஆனால் அவரும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக பொறையார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.