districts

தாட்கோ நிறுவன ஏற்பாட்டில் வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு

கரூர், மே 24 -

      தமிழ்நாடு ஆதிதிராவிடர்  வீட்டு வசதி மற்றும் மேம் பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக 2022 மற்றும் 2023  ஆம் ஆண்டுகளில் 12 ஆம்  வகுப்பு முடித்த ஆதிதிராவி டர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர் களுக்கு, எச்.சி.எல் நிறுவனத் தில் வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு பி.எஸ்.சி. (Computing Desiging), பி.காம், பிசிஏ மற்றும் பிபிஏ  சேர்ந்து படித்திட வழிவகை  செய்யப்படும் என மாவட்ட  ஆட்சியர் டாக்டர் த.பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.

    எச்.சி.எல் நிறுவனத்தில் 12 ஆம் வகுப்பு முடித்த ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி யின இனத்தை  சார்ந்தோ ருக்கு (எச்.சி.எல். டெக்னா லஜிஸ்)-இல் வேலைவாய்ப் புடன் இராஜஸ்தான் மாநிலத் திலுள்ள புகழ்வாய்ந்த பிட்ஸ்பிலானி கல்லூரியில்  பி.எஸ்.சி. (Computing Desiging) பட்டப்படிப்பு,  தஞ்சாவூர் மாவட்டத்தி லுள்ள சாஸ்தரா பல்கலைக் கழகத்தில் பிசிஏ பட்டப் படிப்பு, அமிட்டி பல்கலைக் கழகத்தில் பிசிஏ, பிபிஏ,  பி.காம் மற்றும் நாக்பூரி லுள்ள ஐஐஎம் பல்கலைக் கழகத்தில் Integrated Mana gement பட்டப்படிப்பு சேர்ந்து படித்திட வாய்ப்பு பெற்று தரப்படும்.

     இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியின இனத்தை சேர்ந்தவ ராக இருக்க வேண்டும். 12  ஆம் வகுப்பில் 2022 ஆம்  ஆண்டுகளில் முடித்தவர் கள் 60 சதவீதம் மற்றும் 2023  ஆம் ஆண்டுகளில் முடித்தவர் கள் 75  சதவீதம் தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண் டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். எச்.சி.எல்  மூலம் நடத்தப்படும் நுழை வுத் தேர்வில் தேர்ச்சி பெற்றி ருக்க வேண்டும். இந்நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் வழங் கப்படும்.

   இப்படிப்பிற்கான செலவுகளை தாட்கோ ஏற்கும். இத்திட்டத்தில் வருடாந் திர ஊதியமாக ரூ.1,70,000 முதல் ரூ.2,20,000 வரை பெற லாம். மேலும் திறமைக் கேற்றவாறு பதவி உயர்வின்  அடிப்படையில் ஊதிய உயர்வும் பெறலாம்.  இப்பயிற்சியில் சேர தாட்கோவின் www.tahdco.com என்ற இணையதள முகவரியில்  விண்ணப்பிக்கலாம் என  மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.