districts

அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை

பெரம்பலூர், மே 27-  

    தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளி செயல்பட்டு வரு கிறது. இப்பள்ளியில் 2023-2024 கல்வியாண்டிற்கான மாண வர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.  

    எனவே பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் சேர  விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய  பிரிவுகளில் 3 ஆண்டுகள் சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படு கிறது. இப்பள்ளியில் 12 முதல் 25 வயது வரை உள்ள மாணாக்கர்கள் விண்ணப்பிக்கலாம்.

    நாதசுரம், தவில் மற்றும் தேவாரப் பிரிவுகளில் சேர தமிழ்  எழுத, படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது. இதர பாடப் பிரிவுகளில் சேர 7-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இசைப்பள்ளியில் சேரும் மாணவ, மாணவி யர்களுக்கு தனித்தனியே அரசு விடுதி வசதி உண்டு.  மாணாக்கர் களுக்கு மாதந்தோறும் ஊக்கத் தொகையாக ரூ.400 வழங்கப்படுகிறது. அரசுப் பேருந்துகளில் இலவச பயண சலுகை பெறலாம்.

   பயிற்சிக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.350 மற்றும் பயிற்சி நேரம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி  வரை ஆகும்.  இப்பள்ளியில் சேர விரும்பும் மாணவர்கள் தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, எண்.1, மதனகோபால புரம், நான்காவது தெரு, பெரம்பலூர் என்ற முகவரியில் நேரி லும் தொலைபேசி எண் 04328-275466 மற்றும் கைபேசி எண் 8072519559 ஆகிய எண்களின் மூலம் தொடர்பு கொண்டு  பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தெரிவித்துள் ளார்.