மயிலாடுதுறை, டிச.3 - மயிலாடுதுறை மாவட் டம், செம்பனார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட சேமங் கலம் ஊராட்சி எருமல் கிரா மத்தில் தொடர் கனமழை யால் மூழ்கிய பயிர்கள் ஒரு மாதத்தை கடந்து இன்னும் நீருக்குள்ளேயே இருப்ப தால் சேற்றோடு சேறாக மடிந்து விட்டதாக விவசாயி கள் வேதனையுடன் குமுறு கின்றனர். எருமல் கிராமத்தில் நடவு செய்யப்பட்டிருந்த சம்பா பயிர்கள் 100 ஏக்கருக்கும் மேல் தொடர் கனமழையால் மழை நீரில் மூழ்கி ஒரு மாதத்திற்கும் மேலாகிறது. வடிகால் வாய்க்காலான கீழவெளி வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர்வாரப்ப டாமலும், பெரும்பகுதி ஆக்கி ரமிப்பில் உள்ளதால் வெள்ள நீர் வடிய வழியில்லாமலும் போனதால் விளைநிலங்கள் முழுவதும் ஏரி போன்று காட்சியளிக்கிறது. இதனிடையே பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களது நிலங்களில் இறங்கி அழுகிய நாற்று களை மூழ்கி எடுக்க முயன்ற னர். ஆனால் அவை யெல்லாம் முற்றிலும் சேற் றோடு சேறாக மடிந்து தட மின்றி போனதை அறிந்து பெரும் அதிர்ச்சியடைந் துள்ளனர். உடனடியாக பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணத்தை துரித மாக வழங்குவதோடு, வடிகால் வாய்க்காலை தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி தர வேண்டுமென பாதிக்கப்பட்ட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். பொதுப் பணித்துறை யினர் வழக்கம் போலவே மழைக்காலம் நெருங்கிய பிறகு தூர்வாரும் பணிகளை தொடங்குவதை நிறுத்திக் கொண்டு, பாதிப்பு பகுதி களை ஆய்வு செய்து முறை யாக தூர்வார வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.