திருவாரூர், அக்.15 - திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவிற்கு உட்பட்ட நெமிலிக்குடி ஊராட்சி, வடகுளவேலி மற்றும் தென்குள வேலி கிராமங்களைச் சேர்ந்த நடனசி காமணி, ராஜ்குமார், ஷேக் அப்துல்லா, ரமேஷ், நடராஜன், வெங்கடேஷ், கோகுல் ராஜ், மதியழகன் ஆகியோர் ஜியோ (ரிலை யன்ஸ்) நிறுவனத்தின் சிம் கார்டுகளை பயன் படுத்தி வந்துள்ளனர். வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தங்களுடைய ஊர்களில் ஜியோ நிறுவனத் தின் செல்போன் நெட்வொர்க் சிக்னல் சரிவர கிடைப்பதில்லை. 4ஜி மற்றும் 5ஜி அதி வேக இணையதள சேவைகள் சரிவர கிடைப் பதில்லை. இதனால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும் தங்களில் பலர் இணையதள சேவையை நம்பியே தொழில் மற்றும் வியாபாரம் செய்து வருவதாகவும், அது மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்ப தாகவும் தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறு வனத்திற்கு இ-மெயில் மூலம் தொடர்ந்து புகார்கள் அனுப்பியும், நெட்வொர்க் சிக்னல் களை ஜியோ நிறுவனம் மேம்படுத்த வில்லை. பாதிப்புகள் தொடர்ந்த வண்ணமே இருந்ததால், கடந்த மே மாதம் இவர்கள் அனைவரும் திருவாரூர் நுகர்வோர் நீதி மன்றத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மீது வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலை வர் மோகன்தாஸ் மற்றும் உறுப்பினர் பாலு ஆகியோர் வழங்கிய தீர்ப்பில், “சம்பந்தப் பட்ட ஜியோ நிறுவனம் இணையதள சேவை மற்றும் இணைய வேகம் குறைவாக உள்ள வலங்கைமான் வட்டத்தில் தங்களது அடிப் படை கட்டமைப்பை மேம்படுத்தும் வரை ஜியோ நிறுவனம் தங்களின் சிம் கார்டுகளை விற்பனை செய்யக் கூடாது. புகார்தாரர்கள் தங்கள் இணைப்பைப் பெற்ற தேதியிலிருந்து இன்று வரை செலுத்திய கட்டணத்தை 9 சதவீதம் ஆண்டு வட்டியுடன் திரும்பத் தர வேண்டும். புகார்தாரருடைய மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக தலா ரூ.20,000/- மற்றும் வழக்கு செலவுத் தொகையாக ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10,000/- வீதம் 30 நாட்களுக்குள் வழங்குமாறு” ஜியோ நிறுவனத்திற்கு உத்தரவிட்டனர். ஏற்கனவே தனியார் செல்போன் நிறுவ னங்களின் கட்டண உயர்வால் பெரும் பாதிப்பில் இருக்கும் பொதுமக்கள், நுகர்வோர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்று உள்ளனர்.