districts

தமிழில் பெயர் வைத்தால் பரிசு தஞ்சாவூர் ஆட்சியர்

தஞ்சாவூர், ஆக.24-  

      தமிழில் பெயர் வைக்கப்பட்ட வணிக நிறுவனங்கள், குடியிருப்பு அடுக்ககங்கள் மற்றும் வணிக வளாகங்களுக்குப் பரிச ளிக்கப்படும் எனத் தஞ்சாவூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

      தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டிகள், பற்றுச்சீட்டுகள், விலைப்புள்ளிகள், ரப்பர் முத்திரைகள் ஆகியவற்றைத் தமிழில் அச்சிட்டுப் பயன்படுத்தியும், நிறுவனப் பெயர்ப் பலகைகளைத் தமிழில் அமைத்  தும் உள்ள மூன்று வணிக நிறுவனங்களைத்  தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்  கம்) மூலமாகத் தெரிவு செய்து பரிசுகள் வழங்கப்படும்.

      தகுதியுடைய வணிக நிறுவனத்தினர் இதற்கான படிவத்தை தொழிலாளர் உதவி  ஆணையர் (அமலாக்கம்) அல்லது தமிழ்  வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தி லிருந்தோ பெற்றுக்கொள்ளலாம்.

     மேலும் தமிழில் பெயர் சூட்டியுள்ள குடி யிருப்பு அடுக்ககங்கள், வணிக வளா கங்கள் ஆகியவற்றில் மூன்று குடியிருப்பு அடுக்ககங்கள், மூன்று வணிக வளாகங்கள்  ஆகியவற்றை உள்ளாட்சி அமைப்புகளின் உயர் அலுவலர்கள் மூலமாகத் தெரிவு செய்யப்பெற்று பரிசுகள் வழங்கப்படும்.  

    இதற்கான படிவம் மற்றும் விதிமுறை களை உள்ளாட்சி உயர் அலுவலகம் (மாநக ராட்சி அலுவலகம், நகராட்சி அலுவலகம்,  ஊராட்சி உதவி இயக்குநர் அலுவலகம், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அலுவல கம்) மூலமாகப் பெற்றுக் கொள்ளலாம்.  

    இத்திட்டம் தொடர்பான மேலதிக விவ ரங்கள் அறிய விரும்புவோர், மாவட்ட ஆட்சி யரகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி  இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்  லது தொலைபேசியிலோ (04362-271530)  தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என ஆட்சியர் தீபக் ஜேக்கப் வெளியிட்  டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.