districts

img

3 மாதமாக கூலி வழங்கவில்லை: நூறுநாள் வேலை தொழிலாளர்கள் போராட்டம்

திருச்சிராப்பள்ளி/அரியலூர், அக்.17 - நூறுநாள் வேலை திட்டத்தில் 3 மாதங்களாக கொடுக்கப்படாத ஊதியத்திற்கு சட்டப்படி வட்டி சேர்த்து உடனே கொடுக்க வேண்டும்.  வேலைக்கு வரும் அனைவருக்கும் நூறுநாட்கள் முடியும் வரை தொ டர்ந்து வேலை வழங்க வேண்டும். ஆதார் இணைப்பு, பிஐபி பட்டியல்  என்றுகூறி வேலைக்கு வரும் ஆட்களை குறைப்பதை நிறுத்த வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை  ஊதியம் கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும். 200 நாட்கள் வேலை, தினசரி கூலி  ரூ.600 வழங்க வேண்டும் என வலியு றுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் திருச்சி புறநகர்  மாவட்டக் குழு சார்பில் திங்களன்று வையம்பட்டியில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத் திற்கு ஒன்றியச் செயலாளர் ராஜு தலைமை வகித்தார்.  விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் கண்ணன், மாவட்டக் குழு உறுப்பினர் தெய்வ நீதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் வெள்ளைச்சாமி,   உள்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர். அரியலூர் அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கம் சார்பில் அரியலூர் மாவட்டம் தா.திருமானூர் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஒன்றியச் செய லாளர் பிள்ளைராஜா தலைமை வகித் தார். சிஐடியு மாவட்டத் தலைவர் கே.கிருஷ்ணன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஆர்.புனிதன், விவசாயத்  தொழிலாளர் சங்க முன்னாள் மாவட்டத் தலைவர் எஸ்.சபரிராஜன்,  மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.பி.சாமிதுரை, விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் பி.தங்கராசு உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.