districts

சுட்டெரிக்கும் வெயில்: பாதுகாப்பாக இருக்க மக்களுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

திருவாரூர், ஏப்.10-  வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென பொது சுகா தாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பாக அறி வுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் கூடுவதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள் ளது. மேலும் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் வெப்ப அலைகளின் தாக்கம் ஏற்படும் என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெயிலின் தாக்கத்திலிருந்து பொது மக்கள் தங்களை பாது காத்துக் கொள்ள பொது  சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பாக பொது மக்களுக்கு விழிப்பு ணர்வு ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. பொதுமக்கள் வெளியே செல்லும்  போதும், வீட்டில் இருக்கும் பொழுதும் தேவையான அளவிற்கு தண்ணீர் பருக வேண்டும். அடிக்கடி தண்ணீர் குடிப்பதால் வியர்வை மூலம் நீர் இழப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும். சாலையோர வியா பாரிகள், கட்டுமா னத் தொழிலாளர்கள், மகாத்மா காந்தி நூறு நாள்  வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள், சுரங்கத் தொழி லாளர்கள், பேருந்து நடத்துநர், ஓட்டுநர், இணையதளம் வாயி லாக உணவு மற்றும் வீட்டுத்  தேவை பொருட்கள் விநியோகிப் பவர்கள், காவல்துறையினர், தீய ணைப்பு பணியாளர்கள், குறிப்பாக போக்குவரத்துக் காவலர்கள் ஆகி யோர் மிக கவனமுடன் இருக்க வேண்டும். குழந்தைகள், குறிப்பாக பச் சிளம் குழந்தைகள், நோய்வாய்ப் பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள், வயது முதிர்ந்தோர் மற்றும் நோய் வாய்ப்பட்டவர்கள் வெயிலில் செல்ல  கூடாது. அடிக்கடி வேலை நிமித்த மாக வெயிலில் செல்லும் நபர்கள்,  திறந்தவெளியில் வேலை செய்ப வர்கள் போதிய அளவுக்கு குடிநீர்  பருக வேண்டும். ஓஆர்எஸ் எனப்ப டும் உப்பு சர்க்கரை கரைசலை பருகுவது நலம். ஏனெனில் இத்திர வம் அதிகப்படியான வியர்வையால் ஏற்படும் தாது உப்பு இழப்பினை சமன்படுத்த உதவும். அனைத்து அரசு ஆரம்ப சுகா தார நிலையங்கள், நல வாழ்வு  மையங்கள், துணை சுகாதார நிலை யங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனைகளில் ஓஆர்எஸ் உப்பு சர்க்கரை கரைசல் பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை பாது காத்துக் கொள்ளுமாறு பொது சுகா தாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை கேட்டுக் கொண்டுள்ளது.