திருச்சிராப்பள்ளி, ஜூலை 16 - மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை கேட்டு கடந்த 2023 மே மாதம் முதல் விண்ணப்பித் தவர்களுக்கு இதுவரை உதவித் தொகை வரவில்லை. ஏற்கனவே உதவித்தொகை பெற்றுக் கொண்டிருந்தவர்களுக்கும் நிறுத்தப் பட்டுள்ளதை மீண்டும் வழங்க வேண்டும்.
கிராமப்புற நூறு நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முழுமையாக வேலை கொடுக்க வேண்டும். மாற்றுத்திறனா ளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய இணைப்பு சக்கர வாகனங்கள், உபகரணங்கள், கருவி களை உடனடியாக வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளின் குடும்ப அட்டைக்கு 35 கிலோ விலையில்லா அரிசி வழங்க வேண்டும்.
மாதாந்திர உதவித்தொகை பெறுவதைக் காரணம் காட்டி மாற்றுத்திறனாளி பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க மறுக்கப் பட்டுள்ளது. அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் செவ் வாயன்று மாநிலம் தழுவிய அளவில் மாற்றுத் திற னாளிகளை ஒப்படைக்கும் போராட்டம் நடை பெற்றது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில், போராட்டக்காரர்களுக்கு அனுமதி மறுத்து போலீசார் கதவுகளை பூட்டினர். அதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி கள் முழக்கங்களை எழுப்பினர்.
போராட்டத்திற்கு சங்க புறநகர் மாவட்டச் செயலாளர் ரஜினிகாந்த், மாணவர் மாவட்டச் செயலாளர் குமார் ஆகியோர் தலைமை வகித்த னர். போராட்டத்தை தீர்க்கதரிசி பதிப்பு மேலா ளர் துவக்கி வைத்தார். கோரிக்கைகளை விளக்கி மாநகர் மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், புறநகர் மாவட்டத் தலைவர் ரவி ஆகியோர் பேசி னர். மாவட்ட துணைச் செயலாளர் வெற்றிச்செல் வன் நிறைவுரை ஆற்றினார். பின்னர் மாவட்ட துணை ஆட்சியர் செல்வத்திடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தில், சங்கத் தின் மாவட்டத் தலைவர் டி.கஸ்தூரி, மாவட்டச் செயலாளர் பி.எம். இளங்கோவன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டத் துணைத் தலை வர்கள், செயலாளர்கள் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன் மாற்றுத்திறனாளி களை நேரில் சந்தித்து, அவர்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்றார். இதுகுறித்து அரசுக்கு பரிந்துரை செய்வதாக உறுதியளித்தார். இதை யடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் நடைபெற்ற போராட் டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.தங்கவேல் தலைமை வகித்தார். துணைத் தலை வர் கே.சண்முகம், மாவட்டச் செயலாளர் எம்.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தின் முடிவில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
திருவாரூர்
திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு, மாவட்ட ஒருங்கி ணைப்பு குழு உறுப்பினர் கே.பாலசுப்பிர மணியன் தலைமை வகித்தார். மாவட்டத்தில் திரு வாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் மற்றும் வலங்கைமான், நீடாமங்கலம், மன்னார்குடி, குடவாசல், கொரடாச்சேரி ஆகிய ஒன்றியப் பகுதியிலிருந்து 300-க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர். இறுதியாக, 600 மனுக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்டன.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் டி.கணேசன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் பி.ஜீவா விளக்கவுரை யாற்றினார். மாவட்டச் செயலாளர் எம்.புருஷோத் தமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர்
பெரம்பலூரில் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட அமைப்பா ளர் ராஜசேகர் தலைமை வகித்தார். மாவட்ட துணை அமைப்பாளர்கள், வேப்பூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை, பெரம்பலூர் ஒன்றியங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.