தஞ்சாவூர், மே 7 - மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் எனக் கோரி செவ்வா யன்று மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. அதனொரு பகுதியாக, வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் சேதுபாவா சத்திரம் ஒன்றியத் தலைவர் எஸ்.ஜெ. ராஜேஷ்கண்ணா தலைமையில், சேது பாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவ லர் சடையப்பனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில், “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் நிபந்தனையின்றி உடனடியாக வேலை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இதேபோல், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நூறு நாள் வேலையை உடனடியாக தொடங்கி வேலை வழங்க வேண்டும் என அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத் தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்” என கூறப்பட்டுள்ளது. அப்போது, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ஏ.மேனகா, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஒன்றியத் தலைவர் வீ.கருப் பையா, தென்னை விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.எஸ்.வேலுச் சாமி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்த னர். தஞ்சாவூர் தஞ்சை ஒன்றியம், குருங்குளம், ஆலக்குடி, கள்ளப்பெரம்பூர் ஆகிய ஊராட்சிகளின் கிளைகள் சார்பில், தஞ்சை ஊராட்சி ஒன்றிய அலுவலகத் தில் ஒன்றியச் செயலாளர் ஏ.சாமியப் பன் தலைமையில் மனு கொடுக்கப்பட் டது. இதில் தஞ்சை மாவட்டச் செய லாளர் பி.எம்.இளங்கோவன், மாவட்ட துணைச் செயலாளர் சி.ராஜன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.