districts

img

கல்லணைக் கால்வாய் ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலை

தஞ்சாவூர், அக்.7- தஞ்சை பெரியகோவில் அருகே, கல்லணைக் கால்வா யில் நீரில் மூழ்கிய நிலையில் 3 அடி உயர கருங்கல்லால் ஆன அம்மன் சிலை கண்டெ டுக்கப்பட்டது. அந்த சிலை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. தஞ்சை பெரிய கோவில் உலக பாரம்பரிய சின்ன மாக விளங்கி வருகிறது. இது  தமிழர்களின் கட்டிடக்  கலைக்கு எடுத்துக்காட்டாக வும் திகழ்ந்து வருகிறது. இந்த பெரியகோவிலை சுற்றிலும் பெரிய கோட்டைச்சுவர் அமைந் துள்ளது.  இந்த கோட்டைச் சுவரை யொட்டி தென்பகுதியில் ‘புது ஆறு’ எனப்படும் கல்லணைக் கால்வாய் ஆறு செல்கிறது. இந்த ஆற்றையொட்டி படித் துறையும் உள்ளது. கோவி லுக்கு வரும் பக்தர்கள், பொது மக்கள் இந்த படித்துறையில் குளிப்பது வழக்கம்.  இந்நிலையில், வெள்ளிக் கிழமை இந்த படித்துறையில் ஏராளமானோர் குளித்தனர். அவ்வாறு மதியம் ஆற்றில் குளிக்க வந்தவர்கள், படித் துறையை ஒட்டி நீரில் இறங்கி குளித்துக் கொண்டு இருந்த போது, படித்துறையையொட்டி ஒரு உருவம் போன்று தென் பட்டது. இதனால், குளித்து க்கொண்டு இருந்தவர்கள் அருகில் சென்று பார்த்த போது  அது கருங்கல்லால் ஆன சிலை என்பது தெரிய வந்தது.  உடனடி யாக இதுகுறித்து தஞ்சை மேற்கு காவல் நிலை யத்துக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது.  அதன்பேரில், காவல் துறை ஆய்வாளர் சந்திரா உள்ளிட்ட போலீசார் சம்பவ  இடத்திற்கு விரைந்து வந்த னர். பின்பு அங்கு குளித்துக் கொண்டிருந்தவர்கள் தண்ணீ ரில் மூழ்கியிருந்த கருங்கல் சிலையை கரைக்கு கொண்டு வந்தனர்.  அந்த சிலை 3 அடி உயரம்  உள்ள கருங்கல்லால் ஆன அம்மன் சிலை என்பது தெரிய  வந்தது. தஞ்சை பெரியகோ வில் கோட்டை மதில் சுவரில்  வரிசையாக கருங்கல் சிலை கள் பதிக்கப்பட்டுள்ளன. இதிலி ருந்து ஒரு சிலை பெயர்ந்து  ஆற்றில் விழுந்து இருக்க லாம் என தொல்லியல் துறை அலுவலர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில், ஆற்றில்  இருந்து சிலை கண்டெடுக்கப் பட்ட தகவல் அறிந்ததும் ஏராளமான பொதுமக்கள் ஆற்றங்கரைக்கு வந்து சிலையை பார்த்துச் சென்ற னர். இந்த சிலை தஞ்சை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.