தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறை சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே வீரமாங்குடியில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இலவச தென்னங்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. இதில் ஊராட்சி மன்றத் தலைவர் கனகம், ஒன்றியக் கவுன்சிலர் அன்பழகன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.