districts

சார் ஆய்வாளர் பணியிடத்திற்கு இலவச முழு மாதிரித் தேர்வு

திருச்சிராப்பள்ளி, ஆக.11-

       திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள சார்-ஆய்வாளர் காலிப் பணியிடத்திற்கான போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு கடந்த மே 17 முதல் ஜூலை 28 வரை நடத்தப்பட்டது.

   திருச்சி மாவட்டத்திலுள்ள டி.என்.யூ.எஸ்.ஆர்.பி - எஸ்.ஐ தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் பயன்பெறும் வகையில், வேலை வாய்ப்புத்துறை வாயிலாக, இலவச முழு மாதிரித் தேர்வு ஆக.14, 18 தேதிகளில் இணையதளம் வழியாகவும், ஆக.16, 17, 21, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நேரடித் தேர்வுகள், பாடவாரியாகவும் நடைபெற உள்ளன.

    இணையதள வழியாகவும், நேரடியாகவும் நடத்தப்படும் இம்மாதிரித் தேர்வுகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ள தேர்வர்கள், திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுகும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.  

    மேலும், மாதிரித் தேர்வு தொடர்பான விபரங்களை அறிய 0431-2413510, 9499055901 என்ற திருச்சிராப்பள்ளி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.