பெரம்பலூர், ஜூலை 4-
பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு வங்கி கடன் மேளா மாவட்ட ஆட்சி யர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் 7.7.2023 (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியள வில் நடைபெற உள்ளது.
வங்கி கடன் கோரும் மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை உரிய விண்ணப்பத்தில் குறிப்பிட்டு (ஆதார் அட்டை நகல், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை ஆகிய சான்றுகளுடன்) நேரில் அளிக்கலாம். 18 வயது முதல் 50 வயது வரை உள்ள மாற்றுத்திறனாளிகள் வங்கி கடனுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த கோரிக்கை மனுக்கள் அனைத் தும் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் பரிசீலிக்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் வங்கி கடன் வழங்க ஆவன செய்யப்படும்.
மேலும் விபரங்கள் அறிய மாவட்ட மாற்றுத்திறனாளி கள் நல அலுவலகம் தொலைபேசி எண்ணை (04328 – 225474) தொடர்பு கொள்ளலாம். எனவே மாற்றுத்திறனாளி கள் இச்சிறப்பு வங்கி கடன் மேளாவில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தெரி வித்துள்ளார்.