தஞ்சாவூர், ஜூலை 31-
தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணி கள் நடைபெற்று வருகிறது. தங்கள் பகு திக்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலு வலர்களுக்கு தேவையான விவரங்களை வழங்கி, பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘தஞ்சாவூர் மாவட்டத் திற்குட்பட்ட 8 சட்டமன்றத் தொகுதிகளி லும், 2024 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின் றன.
அதன் ஒரு பகுதியாக முன் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக குடும்பத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களின் விவரங்களும் சரி பார்க்கப்பட்டு வாக்குச்சாவடி நிலை அலு வலர்களுக்கான செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், வாக்காளர் பட்டியலில் புதி தாக பெயர் சேர்ப்பது, பெயர் நீக்கம் செய் வது, அனைத்து திருத்தங்கள் மேற்கொள் வது போன்ற பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. அத்துடன் வாக்குச்சாவடி களை பிரிப்பது, இடமாற்றம், கட்டிட மாற்றம் மற்றும் பெயர் மாற்றம் போன்ற பணிகள் நடைபெறவுள்ளன.
இதையொட்டி, முதற்கட்ட பணியாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் விவரங்களை சரிபார்க்கும் பணிகள் கடந்த 21.07.2023 முதல் தொடங்கப்பட்டு 21.08.2023 வரை நடைபெறவுள்ளது.
வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு 05.01.2024 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப் படும்’’ எனக் கூறப்பட்டுள்ளது.