தென்காசி, ஜூலை 2-
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட செல்லத்துரை(33) , மாரிசெல்வம் (20) ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறை யில் அடைக்கப்பட்டனர்.
வழக்கின் விசாரணையானது திருநெல்வேலி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் சனிக்கிழமை வழக்கை விசாரணை செய்த நீதிபதி அன்புசெல்வி குற்றவாளி செல்லதுரைக்கு 21 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் 1000 ரூபாய் அபராதம், குற்றவாளி மாரிசெல்வத் துக்கு ஒன்றரை வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.