பெரம்பலூர், மார்ச் 11 - மார்ச் 8 சர்வதேச பெண்கள் தின விழாவை யொட்டி பெரம்பலூரில் சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் சிறப்பு பேரவை கூட்டம் துறைமங்கலத்தில் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் கே.மணி மேகலை தலைமை வகித்தார். இணை அமைப் பாளர் ஆர்.செல்வி வரவேற்றார். உழைக்கும் பெண்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.தனலட்சுமி, சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.அகஸ்டின் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். பெண்கள் பணிபுரியும் இடங்களில் குழந்தைகள் காப்பகம், ஓய்வறை அமைக்க வேண்டும். அங்கன்வாடி, ஆஷா, மக்களை தேடி மருத்துவப் பணியாளர்களுக்கு குறைந்த பட்ச சம்பளம் ரூ.26 ஆயிரம் வழங்கி நிரந்தரப்படுத்த வேண்டும். சாலையோர வியாபாரம், கட்டுமானம் உள்பட அனைத்து முறைசாரா பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். பெண்கள் அதிகமாக பணிபுரியும் நக ராட்சி மற்றும் உள்ளாட்சி மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் அவுட்சோர்சிங் காண்ட்ராக்ட் விடுவதை கைவிட்டு, நிரந்தர பணியாளராக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகள் வலியுறுத்தப்பட்டன. சுமதி நன்றி கூறினார்.