districts

img

வீட்டு வேலை செய்பவர்களுக்கு தனி நலவாரியம் உருவாக்க கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, ஜூன் 17 -

    வீட்டு வேலை செய்பவர்களின் தேசிய கோரிக்கை தினத்தை முன்னிட்டு வீட்டு வேலை செய்பவர்கள் சங்க துவக்க விழா வெள்ளியன்று ஸ்ரீரங்கத்தில் நடந்தது. விழாவிற்கு சிஐடியு தரைக்கடை சங்க மாவட்டச் செயலாளர் செல்வி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் சிறப்புரையாற்றினார்.  

    வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். சமூகத் நல திட்டங்களை உருவாக்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.75 வழங்க வேண்டும். 55 வயதிற்கு பின் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.5000 வழங்க வேண்டும். கணக்கெடுப்பு நடத்தி அடையாள அட்டை வழங்க வேண்டும். வீட்டு வேலை செய்பவர்களுக்கு தனி நல வாரியத்தை உருவாக்கி அதற்கு போதுமான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  

   சங்கத் தலைவராக எஸ்.சிவகாமி, செயலாளராக எஸ்.ரேவதி, பொருளாளராக கே.பங்கஜம், துணைத் தலைவராக சி.சாந்தி, துணைச் செயலாளராக எஸ்.தேன்மொழி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் கோவிந்தன் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் ரகுபதி நன்றி கூறினார்.