திருச்சிராப்பள்ளி, ஜூன் 9- திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து தரைக்கடை சில்லரை வியாபாரி சங்க தலை வர் ஜெய்சங்கர் மாநகராட்சிக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி உள்ளார்.
அதில், “திருச்சி காந்தி மார்க்கெட் உள்ளே வியாபாரம் செய்யும் வியாபாரி களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. மார்க் கெட் உள்ளே வரும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. மழை பெய்தால் மழை நீர் வடிவதற்கு சாக்கடை இல்லை. இதனால் சாலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மார்க்கெட்டில் உள்ள கழிவறை சுத்தமாக இல்லை. மார்க்கெட் உள்ளேயும், வெளியே யும் மாடுகள் தொல்லை அதிகமாக உள்ளது. மார்க்கெட் உள்ளே இருக்கும் மின் கம்பங்கள் ஒன்றுகூட வேலை செய்ய வில்லை. இதனால் அப்பகுதியே இருட்டாக காணப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி திருடர்களும், போதை ஆசாமி களும் உள்ளே புகுந்து கடைகளை உடைத்து பணம் பொருட்களை திருடிச் செல்கின்ற னர். இதற்கு மாநகராட்சியும், மாநகராட்சி மேயரும் உடனடியாக தீர்வு காண வேண்டும்” என கூறியுள்ளார்.