மயிலாடுதுறை, பிப்.19- மயிலாடுதுறை மாவட் டம், தரங்கம்பாடியிலுள்ள உலகப்புகழ்பெற்ற டேனிஷ் கோட்டையை கடலரிப்பிலி ருந்து பாதுகாக்க தடுப்புச் சுவர் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. 17-ஆம் நூற்றாண்டில் டென்மார்க் நாட்டினரால் கட்டப்பட்ட இந்தக் கோட்டையை கடந்த 2013-ஆம் ஆண்டு ரூ.4 கோடியே 83 லட்சம் மதிப்பீட்டில் பழமைமாறா மல் புதுப்பிக்கும் பணி நடைபெற்றது. அப்போது கோட்டையின் கிழக்குப்பகு தியிலும் பின்புறத்திலும் பாதுகாப்புச்சுவர் தரமற்ற முறையில் கட்டப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் 2020-ஆம் ஆண்டு அக்டோபரில் சுவற்றின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது அதிலிருந்து தொடர்ந்து சுவற்றின் பெரும் பகுதி கடல் சீற்றத் தால் சேதமடைந்தது. கோட் டையின் பாதுகாப்பு குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வியும் எழுப்பினர். இது குறித்து தீக்கதிரில் தொ டர்ந்து செய்திகள் வெளி யான நிலையில் ரூ 63.35 லட்சம் மதிப்பீட்டில் 110 மீட்டர் தூரத்திற்கு டேனிஷ் கோட்டையை பாதுகாக்கும் வகையில் கடலரிப்பு தடுப்புச்சுவர் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.