பெரம்பலூர், அக்.3 - மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கொண்டு வந்த, 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரி ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில், புதுதில்லியில் ஓராண்டு மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர்கேரியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது, 2022 அக்.3 அன்று ஒன்றிய பாஜக அமைச்சர் அஜய் மிஸ்ரா, அவரது மகன் ஆசிஸ் மிஸ்ரா ஆகிய இருவரும் காரை ஏற்றியதில், 4 விவசாயிகள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இக்கொடூரச் செயல் புரிந்த ஒன்றிய அமைச்சர் இன்னமும் பதவியில் நீடிக்கிறார். சம்பவம் நடந்து ஓராண்டாகியும் நடவ டிக்கை எடுக்காத ஒன்றிய அரசைக் கண்டித்தும், ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி யில் இருந்து நீக்குவதோடு, அவரை கைது செய்ய வலியுறுத்தியும், விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறை வேற்றக் கோரியும், செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் விவசாயிகள் மற்றும் அனைத்து தொழிற்சங்கத்தினர் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள், விவ சாயிகள் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடியு எஸ்.அகஸ்டின், மாவட்டத் தலைவர் ரெங்கநாதன், எல்பிஎப் சார்பில் மாவட்டச் செயலாளர் ரங்கசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத் தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப் பாளர் மு.மாதவன் தலைமை வகித்தார். விதொச மாநிலச் செயலாளர் எஸ்.சங்கர், விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ராமை யன், தலைவர் எஸ்.பொன்னுச்சாமி, இந்திய விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் ஜி.எஸ்.தனபதி, காங்கிரஸ் விவசாயப் பிரிவு மாவட்டத் தலைவர் சேகர், விதொச மாவட்டச் செயலாளர் டி.சலோமி ஆகியோர் பங்கேற்றனர். அனைத்துத் தொழிற்சங்கத்தினர் புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துப் பணிமனை முன்பு அனைத்துத் தொழிற் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு தொமுச மாவட்டச் செயலாளர் கே.கண பதி தலைமை வகித்தார். தொமுச மாவட்டத் தலைவர் ஏ.ரெத்தினம், சிஐடியு மாவட்டச் செய லாளர் ஏ.ஸ்ரீதர், ஏஐடியுசி மாவட்டத் தலைவர் உ.அரசப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருச்சிராப்பள்ளி
திருச்சி பிஎஸ்என்எல் தலைமை அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் சிஐடியு ரெங்க ராஜன், தொமுச ஜோசப் நெல்சன், ஏஐடியுசி சுரேஷ், ஐஎன்டியுசி வெங்கட்நாராயணன், எச்எம்எஸ் ஜான்சன், ஏஐசிசிடியு ஞானதேசி கன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர்கள் நடராஜன், கார்த்திகேயன், மாவட்ட துணைத் தலைவர் முருகேசன், அயிலை சிவசூரியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்
தஞ்சை ரயிலடியில் நடைபெற்ற கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநிலச் செய லாளர் சி.ஜெயபால், தொமுச மாவட்டச் செயலர் கு.சேவியர், ஏஐடியுசி மாநிலச் செயலா ளர் தில்லைவனம், ஐஎன்டியுசி மாவட்ட பொதுச்செயலாளர் மோகன்ராஜ், ஏஐசிசிடியு மாவட்டச் செயலாளர் கே.ராஜன், ஐக்கிய விவ சாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பா ளர் என்.வி.கண்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், ஏஐடியுசி மாநிலச் செயலாளர் சி.சந்திரகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருவாரூர்
திருவாரூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி.எஸ்.மாசிலாமணி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலா ளர் டி.முருகையன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி, விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.கந்தசாமி, சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.என்.கே.அனிபா மற்றும் திருவா ரூர் நகரம், ஒன்றியம், கொரடாச்சேரி, நன்னி லம், குடவாசல், கூத்தாநல்லூர் ஆகிய ஒன்றியங் களைச் சேர்ந்த விவசாயிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
மன்னார்குடி
மன்னார்குடி தேரடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி தலைவர்கள் வி.எஸ்.கலியபெரு மாள், கே.சுப்ரமணியன், எம்.மகேந்திரன், கே.ராவணன் தலைமை வகித்தனர். மயிலாடுதுறை மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச மாவட்ட கவுன்சில் தலைவர் பொன்.நக்கீரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ், மாவட்டத் தலைவர் டி.சிம்சன், சிஐடியு மாவட்டத் தலைவர் ஆர்.ரவீந்திரன் மற்றும் அனைத்து தொழிற்சங்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.