பாபநாசம், டிச.4 - சிறுபான்மையின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சி யின் தலைவரும், பாபநாசம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் சிறுபான்மையின மாணவர்களின் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக் கும் மாணவர்களுக்கும், உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த விண்ணப்பங்களை www.scholar ships.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்ப விபரங்களை, முதற்கட்டமாக அந்தந்த பள்ளிகள் மற்றும் பள்ளிக் கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்து பரிந்துரைக்க வேண்டும். ஆனால், கனமழை காரணமாக கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக பள்ளிகள் சரிவர இயங்கவில்லை. மாணவர்கள் வருகையும் இல்லை. இதன் காரணமாக மாணவர்கள் விண்ணப்ப பதிவு செய்வதற்கு இயலாத நிலை ஏற்பட்டு உள்ளது.
சிறுபான்மையினர் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். இந்த கல்வி உதவித் தொகை பெற, கடந்த ஆண்டுக்கான மதிப்பெண் பட்டியலை பல்வேறு பள்ளிக்கூடங்கள் வழங்காததால் சென்ற ஆண்டின் மதிப்பெண் பட்டியல் பெறுவதில் விலக்கு அளிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் முதலமைச்சருக்குக் கடிதம் வாயி லாக கோரப்பட்டிருந்தது. மனிதநேய மக்கள் கட்சியின் கோரிக்கை யினை தமிழக அரசு ஒன்றிய அரசின் கவனத் திற்கு கொண்டு சென்றது. ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக் கான பிரி மெட்ரிக் உதவித்தொகை, 11-12 ஆம் வகுப்பு பயிலும் ‘போஸ்ட் மெட்ரிக்’ மாண வர்களுக்கான உதவித் தொகை, தகுதி மற்றும் தேவை அடிப்படையிலான உதவித்தொகை ( Merit cum Means based Scholarship), சிறு பான்மை சமூக மாணவிகளுக்கான (Begum Hazrat Mahal National Scholarship) ஆகிய உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசத்தை 15.12.2021 வரை ஒன்றிய அரசு நீட்டித்து அறிவித்துள்ளது. தமிழக அரசின் முன்னெடுப்பிற்கு மனித நேய மக்கள் கட்சி சார்பில் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன். இந்த கால நீட்டிப்பை பயன்படுத்தி இதுவரை விண்ணப்பிக்காத மாணவ - மாணவிகள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.