districts

பாலருவி எக்ஸ்பிரஸ் தூத்துக்குடி வரை நீட்டிப்பு

திருநெல்வேலி, ஆக.19- நெல்லை சந்திப்பில் இருந்து சேரன்மா தேவி, அம்பை, கீழக்கடையம், பாவூர்சத்தி ரம், தென்காசி வழியாக கேரள மாநிலம் பாலக்காடு வரை பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க ஒன்றிய ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்து, கால அட்டவணையும் வெளியிடப்பட்டு உள்ளது.  இதன்படி பாலக்காடு- தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்:- 16791)  பாலக்காட்டில் இருந்து மாலை 4.05 மணிக்கு  புறப்படுகிறது. மறுநாள் அதிகாலை 4.50  மணிக்கு நெல்லை சந்திப்பை வந்தடை கிறது. அங்கிருந்து 4.55 மணிக்கு புறப்பட்டு காலை 7 மணிக்கு தூத்துக்குடி சென்றடை கிறது. மறுமார்க்கத்தில் (வண்டி எண்:- 16792)  தூத்துக்குடியில் இருந்து இரவு 9.25 மணிக்கு புறப்பட்டு, இரவு 11.15 மணிக்கு நெல்லை சந்திப்புக்கு வருகிறது. அங்கி ருந்து வழக்கம்போல் 11.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 12 மணிக்கு பாலக்காடு சென்றடையும். இதேபோல் குருவாயூர்-புனலூர், கொல்லம்-செங்கோட்டை மற்றும் செங்கோட்டை-மதுரை ஆகிய 3 பாசஞ்சர் ரயில்களையும் ஒருங்கிணைத்து குருவா யூர்-மதுரை எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்க  ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.  இந்த ரயில் (வண்டி எண்:- 16327) மதுரை யில் இருந்து பகல் 11.20 மணிக்கு புறப் பட்டு, செங்கோட்டைக்கு மாலை 3.20 மணிக்கு  வந்து 3.25 மணிக்கு மீண்டும் புறப்பட்டு, குருவாயூரை இரவு 2.10 மணிக்கு சென்றடை கிறது.  மறுமார்க்கத்தில் (வண்டி எண்:- 16328) குருவாயூரில் இருந்து அதிகாலை 5.50 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டைக்கு மாலை 3.40 மணிக்கு வந்து, 3.45 மணிக்கு  மீண்டும் புறப்பட்டு மதுரையை இரவு 7.15  மணிக்கு சென்றடைகிறது. இந்த ரயில்கள் ஆகஸ்ட் 27, 28 ஆகிய தேதிகளில் இயக்கு வதற்கு வாய்ப்பு உள்ளது. இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.