சேலம், ஜூலை 8- பட்டியலின மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலத்தை அபகரிப்பு செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, நிலத்தை கையகப்படுத்தி பட்டியலின மக்க ளுக்கு மீண்டு வழங்க வேண்டும் என்பதை வலியு றுத்தி சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு பட்டியலின கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் வலசையூர் கிராமத்தில் உள்ள பட்டியலின மக்களுக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத் தினை ஆக்கிரமிப்பு செய்த மூன்று பேர் மீது உரிய நடவ டிக்கை எடுக்கக் கோரியும், 6ஏக்கர் நிலத்தினை மீட்டு 450 பட்டியலின குடும்பங்களுக்கு வழங்க வேண்டும் என, சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் அறவழிப் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக, சேலம் கோட்டை மைதானத்தில் மாவட்ட பட்டியலின கூட்டமைப்பு தலைவர் வணங்காமுடி தலைமையில் நடைபெற்ற ஆரப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்ற னர்.