தஞ்சாவூர், மார்ச் 18- தமிழ்ப் பல்கலைக்கழக மும், இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி யும், தமிழ் ஒப்பிலக்கியக் கழகமும் இணைந்து நடத்திய “ஒப்பிலக்கியமும் நவீன கோட்பாடுகளும்” என்ற தலைப்பிலான பன் னாட்டுக் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது. இதில், பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்-100 கல்வி அறக்கட்டளையின் மூலம் ஆண்டுதோறும், தமிழ் மொழிக்குச் சிறந்த பங்க ளிப்பு செய்த ஆய்வறிஞர் களுக்கு திறனாய்வுச் செம்மல் விருதும் ரூ.25,000 காசோலையும் வழங்கிச் சிறப்பிக்கப்படுகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டிற்கான திறனாய் வுச் செம்மல் விருதையும், காசோலையையும் மூத்த தமிழ் அறிஞரும் சிறந்த திற னாய்வாளருமான பேரா.தெ.ஞானசுந்தரத்துக்கு, துணைவேந்தர் வி.திரு வள்ளுவன் வழங்கிச் சிறப் பித்தார். பேராசிரியர் க. பஞ்சாங்கம் சிறப்புரை யாற்றினார். இப்பன்னாட்டுக் கருத்த ரங்கில் பல்வேறு ஆய்வு அறி ஞர்கள் தமது ஆய்வுரை களை வழங்கினர். இணைய வழியாகக் கனடாவிலிருந்து பேராசிரியர் பாலசுந்தரம், அங்கோர் தமிழ்ச்சங்கம், கம்போடியாவிலிருந்து தாமரை சீனிவாசராவ் ஆகி யோர் ஆய்வுரைகளை வழங்கினர். கருத்தரங்க ஒருங்கி ணைப்பாளரும், மொழிப்புல முதன்மையரும், இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக் கியத் துறைத் தலைவரு மாகிய பேராசிரியர் ச. கவிதா வரவேற்றார். முனை வர் சி.சாவித்ரி நன்றி கூறி னார்.