பெரம்பலூர், டிச.24 - கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள எழுத்தர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு பெரம்பலூர் மாவட்டத்தில் ஞாயிறன்று (டிச.24) நடைபெற்றது. இத்தேர் வினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் நேரில் பார்வையிட்டார். கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப் பாட்டில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நிறுவ னங்களில், காலியாக உள்ள எழுத்தர் பணி யிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இத்தேர்விற்கு 387 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 325 பேர் தேர்வு எழுதினர். தேர்வின்போது கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் கே.ஜி.மாதவன், கூட்டுற வுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவா ளர் க.பாண்டியன், தேர்வு மைய கட்டுப்பாட்டு அலுவலர் சந்தானலட்சுமி மற்றும் தேர்வு மைய ஒருங்கிணைப்பு அலுவலர் பேபி ராணி ஆகியோர் உடனிருந்தனர்.