திருச்சிராப்பள்ளி, ஜூன் 28- தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, மக்கள் நலனை முன்னிறுத்தி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. நீர்நிலைகளில் நீர் இருப்பு குறைவாக இருக்கக் கூடிய காலங்களில் தூர்வாரி, கொள்ளளவை உயர்த்தினால், மழைக் காலத்தில் அதிகளவு சேமிக்க இயலும் என்பதால் மண்ணெடுத்து விவசாயத்திற்கு பயன்படுத்திட விவசாயிகளிடமிருந்து கோரிக் கைகள் பல வரப் பெற்றன. இதைத் தொடர்ந்து மாநிலமெங்கும் உள்ள நீர்த்தேக்கங்கள், ஏரிகள், கண்மாய் கள், குளங்கள், கால்வாய்களிலிருந்து, வட்டாட்சியர் அளவிலேயே எளிய முறையில் அனுமதி பெற்று, கட்டணமின்றி, விவசாயப் பயன்பாட்டிற்கும், பானைத் தொழில் செய்வ தற்கும், மண், வண்டல்மண், களிமண் வெட்டி யெடுக்க அனுமதித்து தமிழ்நாடு முதல மைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பயனடைந்தோர் தெரிவிக்கை யில், “எனது பெயர் ராமு. நான் திருவானைக் காவலில் கடந்த 40 வருடங்களாக வசித்து வருகிறேன். நான் விளக்கு, மண் பொம்மை கள், அடுப்பு என பலவகை பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். இத்தொழிலுக்கு ஆதாரமான வண்டல் மண், களிமண் எளிதாக கிடைப்பதில்லை. தற்போது நமது முதலமைச்சரின் அறி விப்பால், அந்தந்த ஊர் வட்டாட்சியரிடம் அனுமதி பெற்று இ-சேவை மூலம் விண் ணப்பித்து வண்டல் மண் உடனடியாக கிடைக்க வழிவகை செய்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சருக்கு, மண்பாண்ட தொழில் செய்வோர் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்றார். எனது பெயர் விஜயா, நான் எனது குடும்பத்துடன் திருவானைக்காவல் மேல கொண்டயம்பேட்டையில் சுமார் 25 வரு டங்களாக வசிக்கிறேன். எனது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இந்த மண்பாண்டம் தொழில் தெரிந்திருந்த நிலையில், இதற்கு மூலப் பொருளான களிமண் எளிதாக கிடைக்காமல் சிரமப்பட்டு வந்தேன். இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டு நலிவடைந்துள்ளது. நான் மட்டும்தான் இந்த தொழிலைச் செய்து வருகிறேன். மண் கிடைக்காததால், மற்றவர்கள் வேறு பிழைப்பு தேடிச் சென்று விட்டனர். தற்சமயம் வருவாய்த் துறையின் மூலம் இதற்கு அனுமதி பெற்று மண் கிடைப்பதற்கு காரணமான முதலமைச்சருக்கு நன்றி தெரி விக்கிறோம்” என்றார். “எனது பெயர் சுப்ரமணியன், நான் ஸ்ரீரங்கம் தாலுகாவில் வசித்து வருகிறேன். முதலமைச்சர் இந்த வண்டல் மண் எடுக்க அனுமதி கொடுத்தது எங்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது. காய்கறிகள் பூச்சி தாக்காமல் இருக்கும். இதில் எந்த தண்ணீர் பாய்ச்சினாலும் நல்ல முறையில் வளரும். அதற்கு இந்த வண்டல் மண் உதவியாக உள்ளது. இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த முதலமைச்சருக்கு நன்றி” என்றார்.