districts

img

வரவு-செலவு வித்தியாசத் தொகையை அரசு வழங்க வேண்டும்

திருச்சிராப்பள்ளி, செப்.10 - அரசுப் போக்குவரத்துக் கழகத் தில் வரவுக்கும் செலவுக்குமான தொகையை தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டுமென வலியுறுத்தி அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கை விளக்கக் கூட்டம் நடைபெற்றது. சிஐடியு அரசு விரைவு போக்கு வரத்து ஊழியர் சங்கம் சார்பில் செவ்வாயன்று திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் உள்ள அரசு விரைவு பணிமனை முன்பு கோ ரிக்கை விளக்க வாயிற் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிஐடியு அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்க பணிமனை செயலாளர் ராமையா தலைமை வகித்தார். சிஐ டியு மாநகர் மாவட்டச் செயலாளர்  ரெங்கராஜன் துவக்க உரையாற்றி னார். அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்க மாநிலத் துணைத்  தலைவர் ஜெயராமன், சிவகங்கை மாவட்டச் செயலாளர் சேதுராமன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற் றோர் நல அமைப்பு மாநில துணைத் தலைவர் சண்முகம், கிருஷ்ண சாமி, ராமதாஸ் ஆகியோர் பேசி னர்.  புதுக்கோட்டை புதுக்கோட்டை அரசு போக்கு வரத்துப் பணிமனை முன்பு நடை பெற்ற கூட்டத்திற்கு சிஐடியு சங்க மண்டலப் பொதுச் செயலாளர் ஆர்.மணிமாறன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி  முன்னாள் சிஐடியு சங்க மண்டலப் பொதுச் செயலாளர் எஸ். பாலசுப்பிரமணியன், ஏஐடியுசி பொதுச் செயலாளர் டி.எம்.கணே சன், டிடிஎஸ்எப் பொதுச் செயலா ளர் எச்.இராசசேகர், சிஐடியு மண்ட லத் தலைவர் கே.கார்த்திக்கேயன், பொருளாளர் எம்.முத்துக்குமார் உள்ளிட்டோர் பேசினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  மாவட்டச் செயலாளர் த.செங்கோ டன், ஏஐடியுசி மாவட்டத் தலை வர் உ.அரசப்பன், மாவட்டச் செய லாளர் ஜீவானந்தம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சிஐடியு சங்க  நகரக் கிளைத் தலைவர் அழ கேந்திரன் நன்றி கூறினார். வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்கி  தொழிலாளர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். ஓய்வு பெற்ற அன்றே பணப்பலன்கள் வழங்க வேண்டும். அகவிலைப்படி  உயர்வுடன் ஓய்வூதியத்தை முறைப் படுத்தி அனைவருக்கும் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய  வேண்டும். மற்ற துறை ஊழியர் களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும். பேட்டா, இன் செண்டிவ், மருத்துவக் காப்பீடு, வாரிசு வேலை போன்றவற்றை முறையாக வழங்க வேண்டும். காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். காண்ட்ராக்ட் முறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வாயிற்கூட்டம் நடை பெற்றது.