திருச்சிராப்பள்ளி, ஜூலை 25 - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பாலக்கரை பகுதி குழு மாநாடு ஞாயிறன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு சாந்தா தலைமை வகித்தார். மாவட்ட தலை வர் ரேணுகா, மாநில செயற்குழு உறுப்பினர் ராணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநாட்டில் செங்குளம் காலனி பகுதி மக்களுக்கு தூய்மையான காவிரி குடிநீரை தினமும் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதில் தலைவராக சாந்தா, செயலாள ராக ராஹிலா, பொருளாளராக கலாராணி உள்பட 9 பேர் கொண்ட பகுதிகுழு தேர்வு செய்யப்பட்டது. அபிஷேகபுரம் பகுதிக் குழு 16-வது மாநாடு பகுதிகுழு தலைவர் நிர்மலா தலை மையில் நடைபெற்றது. மாவட்டச் செயலா ளர் சரஸ்வதி, மாநிலக்குழு உறுப்பினர் சலோமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். பஞ்சப்பூர் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலை யம் அமைத்து தர வேண்டும். தூய்மையான காவிரி குடிநீர் தினமும் வழங்க வேண்டும். குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதில் தலைவராக பி.நிர்மலா, செய லாளராக எஸ்.நஜ்மா, பொருளாளராக கலை வாணி உள்பட 11 பேர் கொண்ட பகுதிகுழு தேர்வு செய்யப்பட்டது.