districts

தேர்தல் விழிப்புணர்வு ராட்சத பலூன்

புதுக்கோட்டை, மார்ச் 19 - வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ராட்சத பாலூனை பறக்கவிட்டு புதுக்கோட்டை மாவட்ட தேர்தல்  அலுவலரும், ஆட்சியருமான ஐ.சா.மெர்சி ரம்யா விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நாடாளுமன்ற பொதுத் தேர்தல் தொடர் பாக, திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற தொகுதிக்குட் பட்ட புதுக்கோட்டை சட்டமன்ற  தொகுதியில், புதுக்கோட்டை புதிய பேருந்து நிலை யத்தில், வாக்களிக்க வேண்டி யதன் அவசியம் குறித்து, ‘100 சதவீதம் வாக்களிப்போம்’, ‘தேர்தல் பருவம் - தேசத்தின்  பெருமிதம்’ என்ற விழிப்பு ணர்வு வாசகங்கள் அடங்கிய ராட்சத பலூனை, மாவட்ட  தேர்தல் அலுவலரும், ஆட்சிய ருமான ஐ.சா.மெர்சி ரம்யா,  செவ்வாய்க்கிழமை பறக்க விட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர், புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில், வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்களை இளம் வாக்காளர்கள் மற்றும்  பொதுமக்களுக்கு ஆட்சியர் வழங்கினார்.