சிபிஎம் கறம்பக்குடி வடக்கு ஒன்றியச் செயலாளராக துரை.அரிபாஸ்கர் தேர்வு
புதுக்கோட்டை, நவ.5 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வடக்கு ஒன்றியச் செயலா ளராக துரை.அரிபாஸ்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வடக்கு ஒன்றிய 24 ஆவது மாநாடு கறம்பக்குடியில் தோழர்கள் சி.தம்பியய்யா, தங்கையா ஆகியோர் நினை வரங்கில் செவ்வாயன்று நடைபெற்றது. மாநாட்டுக்கு வி.இள வரசி, மிடறு முருகதாஸ், ஆர்.தினேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநாட்டு கொடியை ஒன்றி யக்குழு உறுப்பினர் கே. தங்கப்பா ஏற்றிவைத்தார். அஞ்சலி தீர்மானத்தை ஒன்றியக்குழு உறுப்பினர் வி.இளவரசி வாசித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் துரை.அரிபாஸ்கர் வர வேற்றார். மாநாட்டை தொ டங்கி வைத்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ. ராமையன் உரையாற்றி னார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் த.அன்பழகன், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.பொன்னுச்சாமி ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். மாநாட்டில் 15 பேர் கொண்ட ஒன்றியக் குழு மற்றும் அதன் செயலாள ராக துரை.அரிபாஸ்கர் தேர்வு செய்யப்பட்டார். புதிய ஒன்றியக் குழுவை அறிமுகப் படுத்தி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்வன் உரையாற்றினார். மாநாட்டை நிறைவு செய்து மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ உரையாற்றினார். ஆர்.சந்திர சேகரன் நன்றி கூறினார்.
சிபிஎம் திருவாரூர் நகரச் செயலாளராக எம்.டி.கேசவராஜ் தேர்வு
திருவாரூர், நவ.5 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் நகரக் குழு 24 ஆவது மாநாடு திருவாரூர் காமராஜர் திருமண மண்டபத்தில் செவ்வாயன்று நடை பெற்றது. தோழர் என்.சங்கரய்யா, தோழர் பி.காளியப்பன், தோழர் ஜி.தனலெட்சுமி ஆகியோர் நினைவாக உரு வாக்கப்பட்ட கொடிமரத்தில் மாநாட்டு செங்கொடியை எம்.பாலசுப்பிரமணியன் ஏற்றினார். மாநாட்டிற்கு எம். சௌந்தரராஜன், வி.சுதா ஆகியோர் தலைமை வகித்த னர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஜி.ரகுராமன் துவக்க உரையாற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர் ஜி.பழனிவேல் வாழ்த்துரை வழங்கினார். 9 பேர் கொண்ட நகரக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு, நகரச் செய லாளராக எம்.டி.கேசவராஜ் தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எம்.கலைமணி புதிய நிர்வாகிகளை அறிமுகப் படுத்தி நிறைவுரையாற்றி னார். திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் உள்ள நிர்வாக சீர்கேடுகளை களைந்து சுகா தாரத்தை மேம்படுத்த வேண்டும். திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் பெண்கள் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறையை முறை யாக பராமரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டன.
சிபிஎம் திருச்சி மேற்கு பகுதிச் செயலாளராக எம்.ஐ. ரபிக் அஹமத் தேர்வு
திருச்சிராப்பள்ளி, நவ.5 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்குப் பகுதி குழு 9 ஆவது மாநாடு திருச்சி புத்தூர் நால் ரோட்டில் உள்ள சண்முகா திருமண மண்டபத்தில் நடந்தது. மாநாட்டிற்கு தோழர்கள் ஹரிபாஸ்கர், வள்ளி, சீத்தா ஆகியோர் தலைமை வகித்த னர். மாநாட்டு கொடியை மூத்த தோழர் வைரமணி ஏற்றினார். பகுதி குழு உறுப்பினர் கணேசன் வர வேற்றார். மாவட்டக் குழு உறுப்பினர் அன்வர் உசேன் துவக்க உரையாற்றினார். மாநாட்டில், தில்லை நகர் 10 ஆவது கிராஸ் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்திற்கு நிழற்குடை அமைத்துத் தர வேண்டும். புத்தூர் நால்ரோட்டில் கல்லூரி, பேருந்து நிலை யம், குடியிருப்பு பகுதியில் இருக்கக்கூடிய டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும். மத்திய பேருந்து நிலையத்தில் மாற்றுத் திற னாளிகளுக்கான கழி வறையை முறையாக பரா மரித்து செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மேற்குப் பகுதி குழு செயலாளராக எம்.ஐ.ரபிக் அஹமத் உள்பட 12 பேர் கொண்ட பகுதி குழு தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டில், கட்சி வளர்ச்சி நிதி சேகரிப்பு இயக்கத்தில் பணியாற்றிய தோழர்களை சிறப்பித்து, நினைவு பரிசாக கேடயம் வழங்கப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரேணுகா நிறைவுரையாற்றி னார். பகுதி குழு உறுப்பினர் ஷேக் மொய்தீன் நன்றி கூறினார்.
சிபிஎம் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியச் செயலாளராக மா.சங்கர் தேர்வு
கும்பகோணம், நவ.5 - மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருவிடை மருதூர் வடக்கு ஒன்றிய 24 ஆவது மாநாடு திருவிடை மருதூரில் நடைபெற்றது. மாநாட்டிற்கு சொக்க லிங்கம், முருகேசன், அம்ச வல்லி ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னதாக ஒன்றிய குழு உறுப்பினர் சேகர் செங்கொடி ஏற்றி னார். ஒன்றியக் குழு உறுப்பினர் முருகேசன் வர வேற்றார். மாநாட்டை மாவட்ட செயற்குழு உறுப்பி னர் செந்தில்குமார் துவக்கி வைத்து பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி வாழ்த்திப் பேசினார். மாவட்டக் குழு உறுப்பினர் சா.ஜீவபாரதி நிறைவுரை ஆற்றினார். மாநாட்டில் கட்சியின் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியச் செயலா ளராக மா.சங்கர் உட்பட 11 உறுப்பினர்கள் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது. திருவிடை மருதூர் வடக்கு ஒன்றிய செயலாளர் மா.சங்கர் நன்றி கூறினார். மாநாட்டில், பட்டு நெசவுத் தொழிலை பாது காத்திட ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும். கோவில் நிலங்களில் குடியிருப்போர் களுக்கு பட்டா வழங்க வேண்டும். ஆடுதுறையில் வேளாண் பல்கலைக்கழ கம், திருவிடைமருதூர் ஒன்றியத்தில் கலைக்கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அமைக்க வேண்டும். திருவிடைமரு தூர் அரசு மருத்துவமனை யில் இரவிலும் சிகிச்சை அளிக்க தேவையான மருத்துவர்கள், ஊழியர் களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.