districts

img

நீதிமன்ற உத்தரவுப்படி ரயில்வே மருத்துவமனை பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்த்திடுக!

திருச்சிராப்பள்ளி, பிப்,22- தென்னக ரயில்வே முழுவதிலும் உள்ள ரயில்வே மருத்துவமனைகளில் 2019 ஆம் ஆண்டு ஆர்ஆர்சி தேர் வாணையம் மூலம் ஒப்பந்த முறையில் பணியில் அமர்த்தப்பட்ட ஹவுஸ் கீப்பிங், அசிஸ்டன்ட் பணியாளர்கள் கொரோனா காலத்தில் அர்ப்பணிப் போடு  பணியாற்றிய 202 ஊழியர் களை எவ்வித முன்னறிவிப்புமின்றி பணிநீக்கம் செய்தது, ரயில்வே மருத்துவமனைகளில் சுகாதாரப் பணியாளர்கள் இல்லாத காரணத்தால் மருத்துவமனை சுகாதார சீர்கேடாகி நோயாளிகள் படும் அவஸ் தைகள் மற்றும் பணியாளர்கள் இல் லாத காரணத்தால் நோயாளிகளை வலுக்கட்டாயமாக டிஸ்சார்ஜ் செய் வது, அறுவை சிகிச்சையை தள்ளி போடும் அவல நிலையை கண்டித்தும்  பணிநீக்கப்பட்டவர்களை நீதிமன்ற உத்தரவுப்படி  மீண்டும் பணியமர்த்த வலியுறுத்தியும் டி.ஆர்.இ.யூ சார்பில் வியாழனன்று பொன்மலை ரயில்வே மருத்துவமனை முன்பு  ஆர்ப்பாட்டம். நடந்தது ஆர்ப்பாட்டத்திற்கு  டி.ஆர்.இ.யூ கோட்டத் தலைவர் சிவக்குமார்.தலை மை தாங்கினார். டிஆர்இயூ பென்சனர் சங்க வெங்கடேசன், திருச்சி கோட்ட செயலாளர் கரிகாலன்,துணை பொதுச் செயலாளர் சரவணன்,  சி.ஐ.டி.யு மாவட்ட துணை தலைவர் மணிமாறன்,பொன்மலை ஒர்க் ஷாப் டிவிசன் தலைவர் லெனின் ஆகியோர் பேசினர். பொன்மலை ஓபன் லைன்கிளை செயலாளர் கவியரசன் மற்றும் பலர் பங்கேற்றனர்.