districts

புயல் எச்சரிக்கையை மீறக்கூடாது தஞ்சை மீனவர்கள் வலியுறுத்தல்

சேதுபாவாசத்திரம், டிச.26-  புயல் எச்சரிக்கையையும் மீறி, வேறு  மாவட்ட மீனவர்கள், தஞ்சாவூர் மாவட்ட  கடல் பகுதியில் மீன்பிடித்து வருவதால்,  சட்டம்-ஒழுங்குப் பிரச்சனை ஏற்படும்  அபாயம் உள்ளது. எனவே, மீன்வளத் துறை, கடலோரக் காவல்துறையினர் கண்  காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் எனக்  கோரிக்கை எழுந்துள்ளது.  வங்கக்கடலில் குறைந்த காற்ற ழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.  இதன் காரணமாக புயல் எச்சரிக்கை விடுக்  கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குச்  செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை யால் அறிவுறுத்தப்பட்டுள்ளது  இந்நிலையில், மீன்வளத்துறை அறி வுறுத்தல் காரணமாக தஞ்சை மாவட்ட மீன வர்கள் கடந்த ஒரு வார காலமாக மீன்  பிடிக்கச் செல்லவில்லை. தஞ்சை மாவட் டத்தை பொறுத்தவரை, மீன்வளத்துறை அறிவுறுத்தலை ஏற்று மீனவர்கள் கட லுக்கு செல்லாமல் உள்ளனர்.  ஆனால், தஞ்சாவூர் மாவட்ட கடல்பகு தியில் கடந்த ஒரு வார காலமாகவே, காரைக்கால், நாகை, இராமேஸ்வரம் உள்ளிட்ட வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர். இவர்கள் தங்குகடல் என்ற பெயரில், ஒரு வார காலம் கடலுக்குள் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.  இவர்கள் தாங்கள் பிடித்த மீன்களை மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் இறக்கி, வியா பாரிகளுக்கும், ஏற்றுமதி நிறுவனங்களுக் கும் விற்பனை செய்து வருவதாக உள்ளூர் மீனவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.  இதனை மீன்வளத்துறை, கடலோரக் காவல்துறையினர், மீன்பிடித் சட்ட அம லாக்கப் பிரிவு அதிகாரிகள் என எவரும் கண்டு கொள்ளாமல் இருப்பது, வெளி மாவட்ட மீனவர்களுக்கு சாதகமாக உள்  ளது.  எனவே, மாவட்ட நிர்வாகம், மீன்வளத் துறை, கடலோரக் காவல் படையினர் இது குறித்து விசாரணை நடத்தி உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சை  மாவட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்  ளனர்.